இடுக்கியில் மாமானரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது!

0
120
#image_title

இடுக்கியில் மாமானரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன்: மருமகனை கைது செய்த போலீசார்.

கேரளா மாநிலம் இடுக்கி வெண்மணி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (65) இவரின் மகளை குஞ்சுக்குட்டன் (35) என்று அழைக்கப்படும் அலெக்ஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீதரன் மகள் தனது கணவருடன் சண்டையிட்டு கடந்த சில மாதங்களாக தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஈஸ்டர் என்பதால் குடும்பத்துடன் ஸ்ரீதரனின் மைத்துனர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்பொழுது அங்கு வந்த மருமகன் அலெக்ஸ் மனைவி மற்றும் மாமானருடன் சண்டை போட்டுள்ளார். மேலும் அங்கிருந்த உறவினர்களிடம் தகராறில் ஈடுபட்டு, அலெக்ஸ் மறைத்து ல் வைத்திருந்த கத்தியை எடுத்து, ஸ்ரீதரனை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த ஸ்ரீதரன், தொடுபுழா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் வழியிலேயே ஸ்ரீதரன் உயிரிழந்தார். தப்பியோடிய அலெக்ஸை, கஞ்சிக்குழி போலீசார் கைது செய்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Savitha