கேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்திற்குள்ளானது!!

கேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்திற்குள்ளானது!!

துபாயிலிருந்து கேரளா வந்த விமானம் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்திற்குள்ளானது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். ஏர் இந்தியா எஸ்பிரஸ் விமானம் கேரளாவில் தரை இறங்கும்போது ஓடுதளத்தில் விபத்து ஏற்பட்டது. தரையிறங்கும் நேரத்தில் முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டு தரையிறங்க முடியாத நிலை நீடித்துள்ளது. இதனால் விமானம் சிறிது நேரம் பறந்தபடியே இருந்துள்ளது. இதையடுத்து மீண்டும் 2வது முறை விமானம் தரையிறங்க முற்பட்டுள்ளது. அப்போதுதான் விமானம் தரையில் … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது

இந்தியாவில் கடந்த 21 நாட்களில் மிக அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று நேற்று முன்தினம் இரவு 20 லட்சத்தை கடந்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி நிலவரங்கள் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கையின்படி வெள்ளிக் கிழமை காலை 8 மணி நிலவரப்படி, நாட்டில் புதிதாக 62,538 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 20,27,074 ஆக உயர்ந்துள்ளது. … Read more

கலெக்டருக்கு டிரைவராக கார் ஓட்ட ஆசை! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட மலரும் நினைவுகள்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

கலெக்டருக்கு டிரைவராக கார் ஓட்ட ஆசைப்படுவதாக மருத்துவர் ராமதாஸ் தனக்கு நேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை மலரும் நினைவுகளாக முகநூலில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது. குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உள்ள கடலூர் மாவட்டம் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த இராமநாதனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு இன்று காலை தொலைபேசியில் வாழ்த்துக் கூறியபோது ஒரு இனிமையான மலரும் நினைவுகள்…. மருங்கூர் இராமநாதனின் மகன் இராம்பிரசாத். அவரும் குடிமைப்பணித் தேர்வில் வெற்றி … Read more

தமிழகத்தின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகின்ற பத்தாம் தேதி வெளியீடு??

தமிழகத்தின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகின்ற பத்தாம் தேதி வெளியீடு??

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, தொற்றின் காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டடு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.மாணவர்கள் தங்களது உயர்கல்வியை தொடர மதிப்பெண்கள் அடிப்படையாக இருப்பதால் காலாண்டு அரையாண்டு மற்றும் வருகைப் பதிவேட்டின் சராசரியின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க கோரி தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளி கல்வி துறையால் உத்தரவிடப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி மிகத் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.அண்மையில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் … Read more

பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை! தவறான தகவல்! அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு!

பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை! தவறான தகவல்! அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு!

பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை! தவறான தகவல்! அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு! தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து தவறான தகவல்கள் பரவி உள்ளதால் இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.இந்நிலையில் மத்திய கல்வித்துறையானது பள்ளிகள் எப்போது திறக்கலாம் என பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று மாநில … Read more

பள்ளிகளைத் திறப்பது பற்றி அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் உறுதியான விளக்கம்

நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பது பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை எனவும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா தொற்று பரவலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திலுள்ள குருமந்தூர் பகுதியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகள் … Read more

இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா திமுக!? கடும் அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!

இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா திமுக!? கடும் அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!

திமுக வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வகித்து வந்தவர் தான் வி.பி துரைசாமி கடந்த சில மாதத்திற்கு முன் பாஜகவில் இணைந்தார்.இதன் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது திமுக வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளதால் விரைவில் அவர்கள் பாஜகவில் இணைவார்கள் என்று கூறி இருந்தார்.அவர் கூறியபடி அண்மையில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் டெல்லியில் உள்ள பாஜக தலைவரை சந்தித்து திமுக விற்கு அதிர்ச்சி ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று திருச்செந்தூர் … Read more

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் யார்? எடப்பாடி பழனிச்சாமி கணிப்பு?

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் யார்? எடப்பாடி பழனிச்சாமி கணிப்பு?

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான,திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.இவரை நினைவு கூறும் வகையில் கருணாநிதியின் மகனும் திமுகவின் தலைவருமான மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று மக்களுக்கு உருக்கமான கடிதத்தை ஒன்று எழுதி வெளியிட்டார்.அதில் அவர் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு ஜனநாயகத்தைச் சிதைக்கும் மத்திய அரசு,மத்திய அரசிற்கு, சரணாகதியாகி நிற்கும் மாநில அரசு என உரிமைகள் அனைத்தும் பறிபோகின்ற இந்தக் கடுமையான காலத்தில் நாம் இருக்கின்றோம். இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் … Read more

100 கோடி அரசாங்க பணத்தையே ஆட்டையை போட்ட கும்பல்?

100 கோடி அரசாங்க பணத்தையே ஆட்டையை போட்ட கும்பல்?

கடந்த மார்ச் மாதம் கோயம்பேடு இந்தியன் வங்கியில் சென்னை துறைமுகத்தின் பெயரில் 100 கோடி ரூபாய் பிக்சட் டெபாசிட் செய்யப்பட்டது,பணம் போடப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு சென்னை துறைமுகத்தின் இணை இயக்குனர் என்று கணேஷ் நாடார் என்பவர் கோயம்பேடு வங்கியில் அறிமுகமாகி இந்த 100 கோடி ரூபாய் டெபாசிட் பற்றிய விபரங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் வாங்கி சென்றனர்.பிறகு இந்த 100 கோடி ரூபாய் பணத்தை 50,50 கோடி ரூபாயாக இரண்டு வங்கி கணக்கில் போடவேண்டும் என்று … Read more

கடலில் விழுந்த மீனவரை மீட்க மத்திய மாநில அரசு உத்தரவு?

கடலில் விழுந்த மீனவரை மீட்க மத்திய மாநில அரசு உத்தரவு?

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் இன்னேசியஸ் என்பவர் இன்று (ஆகஸ்ட் 7) அதிகாலை படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்தார்.விழுவதைக் கண்ட மீனவர்கள் அவர்களை மீட்கும் பணியில் முயன்ற போது அவர்களால் காண இயலவில்லை. தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாகவும், மீனவர்களை மீட்க வான்வழி மீட்பு ஆம்புலன்ஸ் வசதி செய்யக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும் மீனவர்கள் … Read more