அப்டேட் கொடுத்த FASTAG!! ஏப்ரல் 2025 முதல் செயல்படுத்த உத்தரவு!!

Updated FASTAG!! Order to be implemented from April 2025!!

2019 ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யக்கூடியவர்களுக்கு டோல்கேட்டுகளில் fastag உதவியுடன் தோள் கட்டணத்தை செலுத்த டிஜிட்டல் முறையானது உருவாக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்த fastag முறையானது தற்பொழுது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஃபாஸ்டேக் வசதியானது வாகனங்கள் டோல்கேட்டுகளில் நீண்ட நேரம் காத்திருப்பை குறைப்பதற்காகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டதாகும். இந்த முறையில் ஃபாஸ்டேக் அட்டைகளில் பணத்தினை நிரப்புவதன் மூலம் கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருக்கும் RFID … Read more

அரசு கேபிள் டிவி இனி HD இல்!! பரபரப்பாக நகரும் செட்டாப் பாக்ஸ்கள்!!

Govt Cable TV Now in HD!! Busily moving set-up boxes!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கேபிள் டிவி மற்றும் வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக இருந்த ஹெச்டி செட்டாப் பாக்ஸ் திட்டமானது விரைவில் பயனர்களை வந்தடையும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான பயனர்களை வந்தடையும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு பெற்ற செட்டாப் பாக்ஸ் ஆப்பரேட்டர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது … Read more

வங்கி கணக்குகளில் ஏற்படும் பண மோசடிகளுக்கு வங்கிகளே பொறுப்பு!! உச்ச நீதிமன்றம் அதிரடி!!

Banks are responsible for money frauds in bank accounts!! The Supreme Court is in action!!

வாடிக்கையாளர் ஒருவர் தன் ஆர்டர் செய்த பொருளினை ரிட்டன் செய்ய முயன்ற பொழுது கஸ்டமர் கேர் போல் அவருடைய செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. அதனை உண்மை என நம்பிய அந்த வாடிக்கையாளர் அவர்கள் கூறியது படி மொபைல் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்திருக்கிறார். அதன் மூலம் அவருடைய வங்கி கணக்கில் இருந்து 94,000 ரூபாய் திருடப்பட்டிருக்கிறது. இது குறித்து அந்த வாடிக்கையாளர் எஸ் பி ஐ வங்கிய இடம் சென்று புகார் அளித்த பொழுது, இதற்கு … Read more

பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 வழங்கும் தமிழக அரசின் சூப்பர் திட்டம்!! 

Tamilnadu government's super scheme to provide Rs.50,000 for the birth of a girl child!!

தமிழகத்தில் பிறக்கக்கூடிய பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் முதல் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- பெண் குழந்தைகள் பிறந்தால் தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கணவனோ அல்லது மனைவியோ … Read more

சத்துணவு பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.600 லிருந்து உயர்த்தப்பட்ட பொறுப்பு படி!!

Good news for nutritionists!! Liability increased from Rs.600!!

எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரக்கூடிய சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் பொறுப்பு படியானது 600 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டிருப்பதாவது :- புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பணிபுரியக்கூடிய சத்துணவு அமைப்பாளர்களுக்கு நாளொன்றுக்கு பொறுப்பு படியானது 20 ரூபாய் வீதம் மாதம் 600 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும், தற்பொழுது அதனை நாள் ஒன்றுக்கு 33 ரூபாய் … Read more

ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம்!!முதலமைச்சர் வழங்கிய அரசாணை!!

The insurance plan increased to Rs.2 lakh!!

தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சை 1 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், தற்பொழுது அதனை அதிகரித்து அரசாணை வெளியிட்டுள்ளார். இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் நோக்கம் :- முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் என பெயர் மாற்றப்பட்ட இத்திட்டமானது 2018 ஆம் ஆண்டு இந்திய சுகாதாரத்துறையுடன் சேர்ந்து பணியாற்ற துவங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் … Read more

ஆன்லைன் லோன் செயலிகள் மூலம் பணம் மோசடி!!

Scam by online loan apps money!!

ஆன்லைன் லோன் செயலிகள் தற்போது அதிகரித்து வருகின்றன, அவை வசதி மற்றும் விரைவான கடன் பெறும் வாய்ப்பை அளிக்கின்றன. ஆனால், இவை பல்வேறு ஆபத்துகளையும் கொண்டுள்ளன. அவற்றின் மூலம் பெறப்பட்ட கடன்களுக்கு அதிக வட்டி, தவறான தகவல்களைப் பகிர்ந்து விடுதல், மிரட்டல்கள் மற்றும் பணம் திரட்டும் மோசடிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதனாலேயே, மக்கள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி, சிலர் தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர். ஆன்லைன் செயலிகள் பெரும்பாலும் ஏராளமான … Read more

மாணவர்களின் உதவித்தொகைக்காக 50 லட்சம் ஒதுக்கீடு!! தமிழக அரசின் அதிரடி திட்டம்!!

50 lakh allocation for student scholarship!! Tamil Nadu government's action plan!!

தமிழக அரசு தொடர்ச்சியாக மாணவர் கல்வியின் நலனில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக மாற்றத்திறனாளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகிறது. இதன் முக்கிய அம்சங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் சி.ஜி.தாமஸ் உதவித்தொகை பற்றி விளக்கியுள்ளார். இந்தத் திட்டம் மாற்றுத்திறனாளிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இப்பொழுது மேற்கொண்டு ஒரு புதிய திட்டத்தை இணைத்துள்ளது தமிழக அரசு… இதன்படி, ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.2000 ம், … Read more

மாணவர்கள் படித்த  டிகிரி செல்லாது.. ஜாக்கிரதை எச்சரித்த யுஜிசி!! எப்போது நடைமுறைக்கு வரும்??

The degree obtained by the students is not valid

யு ஜி சி வெளியிட்டுள்ள மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்றால் பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகள் யுஜிசி திட்டங்களில் இருந்து நீக்கப்படும். மேலும், பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்யப்படும். இதன் மூலம் அந்த பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் பட்டங்கள் செல்லுபடியாகாது. மேலும் அந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆன்லைன் மூலம் நடக்கும் திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று கெடுபிடி வைத்துள்ளது யுஜிசி. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் யுஜிசி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தாதன் காரணமாக, அரசுக்கு சுமார் 2500 … Read more

அரசின் புதிய பரிந்துரையா அல்லது திசை திருப்புகிறதா? முன்னெச்சரிக்கை தேவை!!

Is it a new government recommendation or a diversion? PRECAUTION NEEDED!!

ஹச்.எம்.பி.வி வைரஸ் முதலில் சீனாவில் பரவியதை தொடர்ந்து, இந்தியாவில் கர்நாடகா, குஜராத்தை அடுத்து தமிழகத்திலும் சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் தொற்று பரவியுள்ளது. அவர்களின் உடல்நலம் சீராக உள்ளது. மேலும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2001 ஆம் ஆண்டே இந்தத் தொற்று கண்டறியப்பட்டது. இந்த தொற்றால் பயப்படத் தேவையில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருந்தால் போதுமானது என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். இந்தத் தொற்று பரவாமல் இருக்க … Read more