கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர 301466பேர் விண்ணப்பம்!!

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர 301466பேர் விண்ணப்பம்!!

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர 301466பேர் விண்ணப்பம்!! அரசு பள்ளியில் படித்த மாணவிகள் 54638 விண்ணப்பம். தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 7ஆயிரத்து 395 இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நேற்று மாலை வரை 301466 பேர் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 246295மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளனர். அரசு பள்ளியில் படித்த மாணவிகள் 54638 விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் … Read more

பள்ளிக்கு செல்ல முடியாமல் பழங்குடியின மாணவர்கள் பரிதவிப்பபு – மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியினர் மனு!!

பள்ளிக்கு செல்ல முடியாமல் பழங்குடியின மாணவர்கள் பரிதவிப்பபு - மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியினர் மனு!!

நாள் ஒன்றுக்கு 40 ரூபாய் செலவு செய்தால் தான் பள்ளிக்கு செல்ல முடியும் என்பதால் தினந்தோறும் பள்ளிக்கு செல்ல முடியாமல் பழங்குடியின மாணவர்கள் பரிதவிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியின மாணவர்கள் மனு அளித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சுமார் 50 பேர் இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து கலந்துரையாடினர். அவர்களுக்கு உயர்கல்வி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் தங்கள் பிரச்சனைகள் … Read more

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிட்ட தேர்வு முடிவில் குளறுபடி – விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்!

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிட்ட தேர்வு முடிவில் குளறுபடி - விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்!

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிட்ட தேர்வு முடிவில் குளறுபடி இருப்பதாக கூறி விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வருடத்தோடு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட உள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை … Read more

சேலத்தில் மின் இணைப்புக்காக, கண்களில் கருப்புத் துணியை கட்டிபோராட்டம் நடத்திய குடும்பம்!!

சேலத்தில் மின் இணைப்புக்காக, கண்களில் கருப்புத் துணியை கட்டிபோராட்டம் நடத்திய குடும்பம்!!

சேலத்தில் மின் இணைப்புக்காக கண்களில் கருப்புத் துணியை கட்டி போராட்டம்!! சேலத்தில் மின் இணைப்புக்காக மூன்று ஆண்டுகளாக போராடுவதாக கூறி,கண்களில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டு வந்து போராட்டம் நடத்திய குடும்பம். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளித்தனர். சேலம் ஓமலூர் சக்கரசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் கண்களில் கருப்புதுணி கட்டிக்கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் … Read more

மதுபான பாரில் தடவியல் அதிகாரிகள் திடீர் ஆய்வு!!

மதுபான பாரில் தடவியல் அதிகாரிகள் திடீர் ஆய்வு!!

மதுபான பாரில் தடவியல் அதிகாரிகள் திடீர் ஆய்வு!! தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் மதுபாரில் மதுவாங்கி குடித்த இருவர் உயிரிழந்து உள்ளனர். இந்த உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தடவியல் அதிகாரிகள் தற்போது மதுபான பாரில் ஆய்வு செய்து வருகின்றனர். தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்த மீன் வியாபாரி குப்புசாமி, டிரைவர் விவேக் ஆகிய 2 பேர் பலியாகினர். இதையடுத்து சம்பந்தபட்ட டாஸ்மாக் கடை, பார் ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டது. … Read more

வருகிறது பாராளுமன்ற தேர்தல்! வந்தது மின்னணு வாக்குப்பதிவு! இயந்திரங்கள் மற்றும் வி வி பேட் மிஷின்!!

வருகிறது பாராளுமன்ற தேர்தல்! வந்தது மின்னணு வாக்குப்பதிவு! இயந்திரங்கள் மற்றும் வி வி பேட் மிஷின்!!

வருகிறது பாராளுமன்ற தேர்தல் வந்தது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி வி பேட் மிஷின்! பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளதை ஒட்டி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்ட்ரோல் யூனிட் மற்றும் யாருக்கு நாம் வாக்களிக்கிறோம் என்பதை வாக்காளர்கள் பார்ப்பதற்காக பயன்படுத்தப்படும் விவி பேட் ஆகியவை இந்திய தேர்தல் ஆணையத்தால் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக ஏற்கனவே மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் … Read more

முதல்வரின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம்!!

முதல்வரின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம்!!

முதல்வரின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம்!! முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்த கோரியும், மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களை போர்க்கால … Read more

சென்னையில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு !

சென்னையில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு !

ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்குவாஷ் போட்டியை சேர்க்க வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தை முன் வைத்து சென்னையில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன என தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் வரும் ஜூன் 13 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடைபெறவுள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் … Read more

கோவில் நிலத்தில் அரசு கட்டிடத்தை கட்ட தடை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!

கோவில் நிலத்தில் அரசு கட்டிடத்தை கட்ட தடை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!

கோவில் நிலத்தில் அரசு கட்டிடத்தை கட்ட தடை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!! சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் கோவில் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் அரசு கட்டிடத்தை கட்ட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கைச் சேர்ந்த தினகரன், விக்னேஷ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், “சிங்கம்புணரி தாலுகா, வடக்கு சிங்கம் புணரி பகுதியில் கோவில் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் அரசு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு … Read more

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி! தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெண்கள் உறுதிமொழி செய்தனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு ஐந்தாம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. … Read more