இரண்டாம் இடத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் அரசியல் எடுபடாது – திருமாவளவன்

VCK Thirumavalavan

இரண்டாம் இடத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் அரசியல் எடுபடாது – திருமாவளவன் தமிழக அரசியலில் எதிர்க்கட்சியாக அதிமுக பதவி வகித்து வந்தாலும் செயல்பாட்டில் பாஜக அந்த இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் அரசியல் எடுபடாது, என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, இலங்கையில் தமிழர்கள் இன்னும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அங்கு காணாமல் போனவர்களின் நிலை என்ன … Read more

2023 ஆம் ஆண்டு இறுதியில் பக்தர்கள் ராமர் கோவிலில் அனுமதிக்கப்படுகிறார்கள்! முழு வீச்சில் கட்டடப்பணி!

2023 ஆம் ஆண்டு இறுதியில் பக்தர்கள் ராமர் கோவிலில் அனுமதிக்கப்படுகிறார்கள்! முழு வீச்சில் கட்டடப்பணி!

உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டு இருந்ததாக தெரிவித்து அந்த மசூதி இடிக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கு பலகாலமாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் அயோத்திய ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தானில் பன்சி … Read more

ரயில்வே துறையிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிப்பு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு 

A similar incident happened in Kallakurichi school 17 years ago! Information released by Mutharasan

ரயில்வே துறையிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிப்பு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு நாகை, திருவாரூர் மாவட்ட மக்கள் ரயில்வே துறையிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டு மக்கள் நலனை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசின் இரயில்வே அமைச்சகமும், தெற்கு … Read more

தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்து – ஆளுநரிடம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Anbumani Ramadoss

தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்து – ஆளுநரிடம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுநர் உணர வேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது, “தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம் வந்த நல்லூரில் கூலி … Read more

அந்த விசாரணை எப்ப தான்ப்பா முடியும்? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

அந்த விசாரணை எப்ப தான்ப்பா முடியும்? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

சின்னசேலம் அருகே உள்ள கணியாமூரில் இருக்கின்ற சக்தி மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் படித்த கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த மாணவி ஸ்ரீமதி மரணமடைந்ததை தொடர்ந்து பள்ளி வளாகத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அந்த பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். பேருந்துகள் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தி தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த கலவரத்தை அடுத்து அந்தப் பள்ளி மூடப்பட்டது. இந்த சம்பவம் நடப்பாண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. தற்சமயம் இந்த பள்ளி வளாகம் சீர் செய்யப்பட்டு விட்டது. அரசு … Read more

இனி கர்ப்பிணி பெண்களுக்கு நோய் தொற்று பரிசோதனை அவசியமில்லை! ஆனால் அவர்களுக்கு நிச்சயமாக பரிசோதனை செய்யப்பட வேண்டும்!

இனி கர்ப்பிணி பெண்களுக்கு நோய் தொற்று பரிசோதனை அவசியமில்லை! ஆனால் அவர்களுக்கு நிச்சயமாக பரிசோதனை செய்யப்பட வேண்டும்!

பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கும் அருவை சிகிச்சை செய்வதற்கும் நோய் தொற்று பரிசோதனை இனிவரும் காலங்களில் கட்டாயம் இல்லை என்று தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மத்திய அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில் நோய் தொற்று பரிசோதனைகள் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில், காய்ச்சல், இருமல், தொண்டை வலி, … Read more

திமுக ஒரு இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படும் கட்சி! முன்னாள் அமைச்சர் விளாசல்!

திமுக ஒரு இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படும் கட்சி! முன்னாள் அமைச்சர் விளாசல்!

கோவில்பட்டியில் அதிமுகவைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம் உதயநிதி மட்டுமல்ல அவருக்கு அடுத்த வாரிசு வந்தாலும் திமுகவிற்கு அவர்கள் தான் தலைமை ஏற்கும் நிலை இருக்கிறது திமுகவினரை பார்த்து அஞ்சும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார் வாரிசு அரசியலை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் அதிமுக. கடுமையாக உழைக்கும் தொண்டர்கள் அதிமுகவில் தலைமை பொறுப்புக்கு வரலாம் என்று கூறியுள்ளார். … Read more

அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்தார் அண்ணாமலை! தமிழ்நாடு முழுவதும் 5000 பகுதிகளில் தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கும் பாஜக!

அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்தார் அண்ணாமலை! தமிழ்நாடு முழுவதும் 5000 பகுதிகளில் தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கும் பாஜக!

தமிழ்நாடு முழுவதும் 1200 பகுதிகளில் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு முழுவதிலும் அடுத்த கட்டமாக தமிழக அரசுக்கு எதிராக 5000 பகுதிகளில் போராட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்திருக்கிறோம் என்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். அரசியல் சாசன தினத்தை ஒட்டி அந்த நாளை நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் விதத்தில் 12 இருசக்கர வாகன பந்தய வீரர்கள் 9 மாநிலங்களுக்கு பயணம் செய்து தமிழகத்திற்கு திரும்பி வந்ததை கொண்டாடும் விதத்தில் சென்னை எழும்பூரில் இருக்கின்ற … Read more

திருப்பூர் அருகே கோர விபத்து! டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

திருப்பூர் அருகே கோர விபத்து! டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

கோவையில் இருந்து நாகராஜ் என்பவர் தன்னுடைய நண்பரான பாலசுப்பிரமணியம் என்பவருடன் 2 சக்கர வாகனத்தில் திருப்பூர் நோக்கி போய்க் கொண்டிருந்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சென்று கொண்டிருந்த சமயத்தில், பின்னால் கொச்சியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி பயணமாகி கொண்டிருந்த கேஸ் டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென்று எதிர்பாராத நேரத்தில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் டேங்கர் லாரியின் பின் சக்கரம் 2 சக்கர வாகனத்தின் மீது ஏறி, … Read more

புதுக்கோட்டை அருகே அழகிய நிலையில் கிடந்த இளம் பெண் சடலம்! தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

புதுக்கோட்டை அருகே அழகிய நிலையில் கிடந்த இளம் பெண் சடலம்! தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் இருக்கின்ற பல்லவராயன் பத்தை கிராமத்தை சார்ந்தவர் திருச்செல்வம் இவருடைய மனைவி பழனியம்மாள் பழனியம்மாள் கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அதன் பிறகு காணாமல் போனார் என்று சொல்லப்படுகிறது. உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் பழனியம்மாள் கிடைக்கவில்லை. ஆகவே இது தொடர்பாக காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பதிவு செய்து காணாமல் போன பழனியம்மாளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தான் … Read more