பேருந்தின் மீது கல் எரிந்து வாலிபர்கள் அட்டகாசம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

0
76
Stones burned on the bus and the youths were furious! A lot of excitement in the area!
Stones burned on the bus and the youths were furious! A lot of excitement in the area!

பேருந்தின் மீது கல் எரிந்து வாலிபர்கள் அட்டகாசம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம்  புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தாளமுத்துநகர் அருகே உள்ள சிலுவைப்பட்டிக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு மினிபஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து  புதிய முனியசாமிபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அங்கு சாலையில் இரண்டு வாலிபர்கள் பேருந்திற்கு வழிவிடாமல் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் பேருந்தில்  இருந்த பயணிகள் வாலிபர்களை கண்டித்து சத்தம் போட்டு உள்ளனர். ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பேருந்தின் மீது கல்வீசி தாக்கினார்கள். அப்போது பேருந்தின்  பின்பக்க கண்ணாடி சேதம் அடைந்தது. மேலும் பயணிகள் எந்தவித  காயமும் இன்றி  உயிர் தப்பினார்கள். இது குறித்து தாளமுத்துநகர் போலீசார்ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K