தென் அமெரிக்காவில் அரங்கேறிய வினோதமான சம்பவம்

Photo of author

By Parthipan K

தென் அமெரிக்காவில் அரங்கேறிய வினோதமான சம்பவம்

Parthipan K

தென் அமெரிக்க நாடான பெருவில் கிருமித்தொற்றுக்கான கட்டுப்பாடுகளை மீறிய 8 கோமாளிகளைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். அந்த 8 பேரும் ஒரே தொழிலில் ஈடுபடும் சக கலைஞரின் இறுதிச் சடங்கிற்குச் சென்றுள்ளனர். இறந்தவரை வழியனுப்பி வைக்கும்வண்ணம் அவர்கள் இறுதிச் சடங்கில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. தென்னமெரிக்காவில் அதிகரிக்கும் கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இவ்வேளையில் வரம்பை மீறி நடந்துகொண்டதற்காக அந்த 8 கோமாளிகளையும் அதிகாரிகள் கைதுசெய்தனர்.