உணவில் குண்டூசி வைத்த கொடூர சம்பவம்; பசியில் ஓடிவந்து ரத்தம் கொட்டிய நாய்! எங்கே போனது மனிதநேயம்..?

0
249

உணவில் குண்டூசி வைத்த கொடூர சம்பவம்; பசியில் ஓடிவந்து ரத்தம் கொட்டிய நாய்! எங்கே போனது மனிதநேயம்..?

நாய்க்கு உணவளிப்பது போல பன்னுக்குள் குண்டூசியை ஒளித்து வைத்து வீசுகிறார்கள். பசியில் இருந்த நாய் அதை உண்ணபோது வாயில் குத்தி ரத்தம் வந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த பூமியில் பிறந்த எல்லா உயிர்களுக்கும் இம்மண்ணில் சம உரிமையுடன் வாழ தகுதியுள்ளது. மனித இனத்தில் பிறந்த சிலருக்கு பிற உயிர்களிடம் அன்பை பற்றியோ, அதன் வாழ்க்கைமுறை பற்றியோ தெரியாமல் விபரீத விளையாட்டை விளையாடுகிறார்கள்.

பசியால் வந்த நாய்க்கு வாய்முழுக்க ரத்தம் கொட்டிய புகைப்படம் பார்ப்பவர்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. இதுகுறித்து விஜயகுமார் என்கிற வலைதளவாசி தனது முகநூலில் வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.

எத்தனை பெரிய மனிதனுக்கு
இத்தனை சிறிய மனமிருக்கு
நாய்க்கு தின்ன உணவளிப்பது போல பன்னுக்குள் குண்டூசிகளை நிறைய ஒளித்து வைத்து நாய் முன்னாடி வீசியுள்ளார்கள்

பசியில் ஓடிப் போய்த் தின்னும் நாயின் வாயில் குத்தி ரத்தம் வருவதைப் பாருங்கள்.

நாய் அப்படி ஓடிப்போய் தின்பதற்குக் காரணம் அது மனிதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் மனிதன் செய்வது நம்பிக்கைத் துரோகம்

இயற்கைக்கு உயிரினங்களுக்கு
சுற்றுச் சூழலுக்கு இந்த மனித நாய்கள்கள்தான் பேராபத்து

இயற்கைக்கு பயங்கரவாதி மனிதகுலம்தான்

ஏதாவது கோள் மோதி பூமி அழிந்தால்கூட மிக்க மகிழ்ச்சிதான்

ஜாதிமதம், ஏழை, பணக்காரன், இலக்கியம், சினிமா, தத்துவம், குடும்பம், ‌அன்பு என எதுவும் அறிய வேண்டியதில்லை.

இந்த உலகில் சாவதைவிட வாழ்வதுதான் மிகக் கொடூரம், அப்படி ஆக்கிவைத்தது இந்த பகுத்தறிவற்ற இழிந்த மனித நாய்கள்தான்.

https://m.facebook.com/story.php?story_fbid=2565897960401256&id=100009432313466

இந்த சம்பவம் சென்னையில் நடந்ததாக கூறப்படுகிறது.

Previous articleஹாரி – மேகனுக்கு ராயல் பெயரை பயன்படுத்த தடை விதித்த இங்கிலாந்து ராணி!!
Next articleசிவராத்திரி தினத்தன்று கண் விழிப்பது ஏன்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here