டீ கொடுக்காததால் கடுப்பான மருத்துவர்! அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்திவிட்டு சென்ற அவலம்!!

0
31
#image_title

டீ கொடுக்காததால் கடுப்பான மருத்துவர்! அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்திவிட்டு சென்ற அவலம்!!

டீ கொடுக்காததால் மருத்துவர் கோபமடைந்து அறுவை சிகிச்சையை பாதியிலேயே நிறுத்திலிட்டு சென்ற சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தற்பொழுது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் மௌடா பகுதி உள்ளது. இங்கு உள்ள அரசு மருத்துவமனையில் 8 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 8 பெண்களில் 4 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதையடுத்து அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் பாலவி மருத்துவமனை ஊழியர் ஒருவரிடம் டீ வேண்டும் என்று கேட்டுள்ளார். நீண்டநேரம் ஆகியும் மருத்துவர் பாலவி அவர்களுக்கு டீ கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த மருத்துவர் பாலவி அவர்கள் அறுவை சிகிச்சையை பாதியிலேயேவிட்டுச் சென்றார்.

அறுவை சிகிச்சை செய்வதற்கு 4 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு தயார் நிலையில் இருந்த பொழுது டீ கிடைக்காததால் மருத்துவர் பாலவி பாதியிலேயே விட்டுச் சென்றது உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இதையடுத்து உடனே இது குறித்து மாவட்ட மருத்துவ அலுவலர் அவர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வேறு ஒரு மருத்துவர் வந்து அறுவை சிகிச்சை செய்யபடாமல் இருந்த நான்கு பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து முடித்தார்.

இது குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி “இந்த சம்பவம் குறித்து உறிய விசாரணைக்குழு அமைப்பட்டு விசாரணை நடத்தி அறுவை சிகிச்சையை பாதியிலேயே விட்டு சென்ற மருத்துவர் பாலவி அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் அறுவை சிகிச்சையை பாதியிலேயே விட்டுச் சென்ற மருத்துவர் பாலவி அவர்களுக்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.