திடீரென்று முதியவர் உயிரிழப்பு.. பூச்சி தான் முக்கிய காரணமா!..

0
143
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

திடீரென்று முதியவர் உயிரிழப்பு.. பூச்சி தான் முக்கிய காரணமா!..

பெருந்துறையை அடுத்துள்ள சிப்காட் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் தான் கிட்டுசாமி. இவருடைய வயது 58. பெருந்துறை சிப்காட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மொபட்டில் டீக்கடை வியாபாரம் செய்து வருகிறார்.இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 10 மணி அளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடைகளை பூட்டிவிட்டு தன் வீட்டிற்கு வந்து படுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் உள்ளங்கையில் ஏதோ ஒரு பூச்சி கடித்தது போல் உணர்வு ஏற்பட்டுள்ளது.இது பற்றி தன் மனைவி மற்றும் மகனிடம் இது பற்றி கூறினார். அதன்படி அவர்கள் கிட்டுசாமி படுத்திருந்த அறையில் வந்து தேடி பார்த்தார்கள். ஆனால் அங்கு எதுவுமே கண்ணுக்கு தெரிய வில்லை.சிறிது நேரத்திலேயே சிப்காட் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனால் அவர்கள் பயந்து போய் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உடனடியாக அவரை அழைத்துச் சென்றார்கள். அங்க அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் அதன் பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீரென்று ஒருவர் உயிரிழந்த சம்பவம் மகன் மற்றும் மனைவி இருவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

author avatar
Parthipan K