திடீரென்று ரயில் தீப்பற்றி எரிந்த சம்பவம்!! பயணிகளிடையே பரபரப்பு!!

0
33
Suddenly the train caught fire!! Busy among passengers!!
Suddenly the train caught fire!! Busy among passengers!!

திடீரென்று ரயில் தீப்பற்றி எரிந்த சம்பவம்!! பயணிகளிடையே பரபரப்பு!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹவுராவிலிருந்து செகந்திராபாத் சென்று கொண்டிருந்த ஃபலக்னுமா ரயில் திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ரயில் மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது என்று கூறி வருகின்றனர். ஹைதராபாத் மாநிலம் அருகே பொம்மிபள்ளி மற்றும் பகிடி பள்ளி பகுதிக்கு இடையே இந்த ரயில் செல்லும் போது திடீரென்று ரயிலின் மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்துள்ளது.

எனவே உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு உள்ளே இருந்த பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியே அனுப்பி விட்டதாக ரயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர்.

சரியான நேரத்தில் தீப்பற்றியதை உடனடியாக பார்த்ததால் பயணிகள் யாருக்கும் எதுவும் பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயிலில் எற்பட்ட மின் கசிவை கவனிக்காமல் விட்டக் காரணத்தால், தெலுங்கானா மாநிலத்தின் ஹவுராவிலிருந்து செகந்திராபாத் சென்று கொண்டிருந்த இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பற்றிக் கொண்டது என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இந்த நிகழ்வால் அப்பகுதியில் பரபரப்பு சூழல் நிகழ்ந்து வருகிறது. மேலும் அந்த ரயிலில் பயணித்த பணிகள் அனைவரும் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

author avatar
CineDesk