இன்றுடன் முடிவடைகிறது..டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள்.!

0
140

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன.

இன்று அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

மேலும், மற்ற 8 நாடுகள் தகுதி சுற்றில் விளையாடி அதிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இதில் உள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘எ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூகினியா அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த 8 அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதிச் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. இதில் தகுதி பெறும் 4 அணிகள் நாளையிலிருந்து நடைபெறும் சூப்பர் 12 போட்டிகளுக்கு தகுதி பெறும்.

இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்காட்லாந்து, வங்காளதேசம் அணிகளும், ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணியும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள ஒரு அணி இன்று நடைபெறும் கடைசி 2 தகுதி சுற்று போட்டியை பொறுத்தே தேர்வு செய்யப்படும்.

இதில், இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் நமீபியா அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதே, மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இலங்கை- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

இன்று நடைபெறும் முதல் போட்டியில் நமீபியா-அயர்லாந்து அணிகள் மோதும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணியே சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறும். ஏ பிரிவிலிருந்து இலங்கை அணி ஏற்கனவே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.