கற்களால் மட்டுமே கட்டப்படும் ராமர் கோயில்…. ஏன்?

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு நடுவண் அரசால் ராமர் கோயில் கட்ட ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டுகோயில் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாகி சம்பத் ராய் ” ராமர் கோயில் கற்களால் மட்டுமே கட்டப்படுகிறது. மணல், இரும்பு, சிமெண்ட் போன்றவை பயன்படுத்தப்போவதில்லை. கற்களால் மட்டுமே கட்டுவதன் மூலம் 1000 வருடங்களுக்கு மேல் காற்று, நீர், வெப்பம் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் நிலைத்து நிற்கும்” என்றார்.

வெகு விமர்சையாகக் கொண்டாடப் பட்ட அடிக்கல் நாட்டு விழா

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியாக இன்று அடிக்கல் நாட்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.இன்று விழாவில் 175 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று உத்தரப்பிரதேசம் அயோத்திக்கு 29 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தார்.இவர் தங்க நிறத்திலான குர்தாவையும் வெள்ளை நிற வேட்டியையும் அணிந்து கொண்டு விழாவில் பங்கேற்றார். கோயில் கட்டும் பணி தொடங்கும் வேலையாக அயோத்தியில் வெள்ளியாலான செங்களை நட்டுவைத்து பணியை தொடங்கி வைத்தார் … Read more