சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.. உங்களுக்கு தெரியுமா? எப்படி உரிமைகோர்வது?..

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.. உங்களுக்கு தெரியுமா? எப்படி உரிமைகோர்வது?..

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.. உங்களுக்கு தெரியுமா? எப்படி உரிமைகோர்வது?..

நாம் தினமும் சமையல் செய்ய பயன்படுத்தும் எல்.பி.ஜி கேஸ் சிலிண்டருக்கு காப்பீடு உண்டு என்பது நம்மில் பலருக்குத் தெரியாத ஒன்று.நகரத்தில் இருக்கும் மக்களாவது அவ்வப்போது இணையத்தில் படித்து எல்.பி.ஜி கான காப்பீடுகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரிவதில்லை.

ஒரு LPGசிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் காப்பீட்டுத் தொகையும் அதனுடன் வந்து சேர்கின்றது.சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் நேர்ந்தால் சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்.

ஒரு நபருக்கு ரூ.10 லட்சம் வரையும் இழப்பீட்டைப் பெறலாம். ஒருவேளை விபத்தால் மரணம் ஏற்பட்டால் இறந்த ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.5 லட்சம் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து வழங்கப்படும்.மேலும் மருத்துவக் காப்பீடாக ஒரு விபத்துக்கு ரூ.15 லட்சம் வரை பெற முடியும்.கேஸ் சிலிண்டருக்கான இன்ஷூரன்ஸை சிலிண்டர் வைத்திருப்பவர்கள் எடுக்கத் தேவையில்லை. அதை சிலிண்டர் டிஸ்ட்ரிபியூட்டரே எடுத்து விடுவார்.அரசு விதிமுறையின் படி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் தங்கள் கொடுக்கும் காஸ் இணைப்புக்கு கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.

இந்த பாலிசியின்படி இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்துஎண்ணெய் நிறுவனங்கள் பெறக்கூடாது. பிரீமியம் செலவுகள் அனைத்தும் நிறுவனத்தையே சேரும்.இதனைத்தொடர்ந்து
எப்படி க்ளெய்ம் செய்வது என்று பார்ப்போம்.
நீங்கள் இணைப்பு வைத்திருக்கும் எண்ணெய் நிறுவனம் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் விநியோகஸ்தர் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் என இரண்டு இன்ஷூரன்ஸ் இருக்கும். இதில் சிலிண்டரில் விபத்து ஏதும் ஏற்பட்டால் அதை உடனடியாக விநியோகஸ்தருக்குத் தெரிவிக்க வேண்டும்.

இந்த விபத்தை நேரில் ஆய்வு செய்து அதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிவிப்பார்.காவல் துறைக்கு அந்த விபத்தைத் தெரிவிக்க வேண்டு.இன்ஷூரன்ஸ் அதிகாரி விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து உங்களின் உரிமைகோரவும் தொகையை நிர்ணயிப்பார். இதில் சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும் முகவரி நபரின் பெயர் ஆகியவை சரியாக இருக்க வேண்டும்.

கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரத் காலதாமதமானால் விபத்து ஏற்பட்டு பொருள்கள் சேதம் அடைந்ததற்கான ஆதாரத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டும். தரை சேதம் அடைந்திருந்தால் அதை கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரும்வரை அப்படியே வைத்திருக்கலாம் அல்லது அதைச் சரி செய்ததற்கான ரசீதை வைத்திருக்க வேண்டும்.
சிலிண்டர் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை இவ்வளவு தொகைக்குதான் உரிமைகோரவும் என எந்தவிதமான வரைமுறையும் கிடையாது.விபத்தின் தன்மையைப் பொறுத்தும் அதன் பாதிப்பைப் பொறுத்தும் உரிமைகோரவும் தொகை வித்தியாசப்படும்.

சிலிண்டர் விலை திடீரென்று உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி!

Cylinder price suddenly increased! Public shock!

சிலிண்டர் விலை திடீரென்று உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! நாடு முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஐந்து கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்குவதற்கான உஜ்வாலா யோஜனா திட்டத்தை மோடி அரசு  உருவாக்கியது. இதற்கான மத்திய அரசு 8 கோடி நீதி ஒதுக்கி உள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில்  இந்த திட்டத்தின் கீழ் 6 கோடி இலவச சமையல் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு … Read more

சமையல் எரிவாயு விலை திடீர் குறைவு..!!

சமையல் எரிவாயு விலை திடீர் குறைவு..!!

சமையல் எரிவாயு விலை திடீர் குறைவு..!! சென்னையில் மானியம் இல்லாத வீட்டுப் பயன்பாட்டு சிலிண்டர்களின் 64 ரூபாய் விலை குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் உருவாகும் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து ஆயில் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் வீட்டுப் பயன்பாடு மற்றும் பல்வேறு உணவக இடங்களில் பயன்படும் கியாஸ் சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதன்படி 14.2 கிலோ எடையுள்ள மானியம் இல்லாத உருளைகளின் விலை ரூ.61.5 முதல் ரூபாய் 65 வரை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இந்த … Read more