பெரியகுளம் டிஸ்பி தலைமையில் அதிமுகவினர் இடையே  கலைந்துரையாடல்!

On behalf of the AIADMK, a consultation meeting was held under the leadership of the city secretary of Periyakulam!

பெரியகுளம் டிஸ்பி தலைமையில் அதிமுகவினர் இடையே  கலைந்துரையாடல்! தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானபட்டி காவல் நிலையத்தில் இன்று  பெரியகுளம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துகுமார் தலைமையில் அதிமுக சார்பில்  தேனியில் உள்ள பங்களாமேட்டில் மின்சார உயர்வை கண்டித்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்கு இடையே  தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் தேவதானபட்டி  சுற்றி உள்ள ஊர்களில் உள்ள  அதிமுக நிர்வாகிகளை  நேரில் அழைத்து   நடைபெற உள்ள ஆர்பாட்டத்திற்கு எத்தனை வாகனங்கள் செல்கின்றன … Read more

அதிமுக சார்பில் பெரியகுளம் நகர செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

On behalf of the AIADMK, a consultation meeting was held under the leadership of the city secretary of Periyakulam!

அதிமுக சார்பில் பெரியகுளம் நகர செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக சார்பில் பெரியகுளம் நகர செயலாளர் அப்துல் சமது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழகத்தினுடைய முன்னாள் முதல்வரும் அதிமுகவினுடைய இணை ஒருங்கிணைப்பாளருமான ஓ .பன்னீர்செல்வம் அவர்களுடைய வழிகாட்டுதலின்படியே செயல்படுவோம் என்றும், அவருடைய ஒவ்வொரு செயலுக்கும் அனைவரும் கட்டுப்பட்டு சிறப்பாக செயல்படுவோம் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரியகுளம் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் குழு … Read more

மயிலாடும்பாறை – மல்லபுரம் மலைச்சாலையில் தடுப்புசுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை!

Public demand to build barrier on Mayiladumparai - Mallapuram hill road!

மயிலாடும்பாறை – மல்லபுரம் மலைச்சாலையில் தடுப்புசுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை! தேனி – மதுரை இரண்டு மாவட்டங்களை இணைக்கும் சாலை மயிலாடும்பாறை மல்லபுரம் மலைச்சாலை ஆகும், இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருவது வழக்கம், இப்பகுதியில் தினந்தோறும் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் மல்லப்புரம் பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று வருகிறார்கள். மேலும் வாகனங்கள் செல்லுகின்ற பொழுது இடதுபுறம், வலதுபுறம் ,மலைகளின் சாலையில் ஆங்காங்கே சருக்கு ஏற்படுகிறது, இதனால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சிலவேளைகளில் … Read more

மான்களுக்கான தண்ணீர் தொட்டடியை ஆக்கிரமித்த மதுபிரியர்கள்! நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் கோரிக்கை!  

Alcoholics who occupied the water tank for deer! People demand to take action!

மான்களுக்கான தண்ணீர் தொட்டடியை ஆக்கிரமித்த மதுபிரியர்கள்! நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் கோரிக்கை! தேனி மாவட்டம் கண்டமனூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட அய்யனார் கோவில் மலைப்பகுதியில் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளம் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், தண்ணீரை தேடி மலையடிவாரத்தில் உள்ள தேனி-வருசநாடு சாலையை கடந்து மூலவைகை ஆறுக்கு வனவிலங்குகள் வருகின்றன. இதேபோல் அடிவாரத்தை ஒட்டியுள்ள தோட்டங்களுக்கும் அவை புகுந்து விடுகின்றன. இவ்வாறு தண்ணீரை தேடி செல்லும் விலங்குகள், சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத … Read more

சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் மோசடி! கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

Fraud in the construction of cement roads! Officials who do not see!

சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் மோசடி! கண்டுகொள்ளாத அதிகாரிகள்! தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே பழங்குடியினர் காலனி பகுதியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அருகில் உள்ள ஓடையில் மணல் திருடி தரமற்ற முறையில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஒன்றிய அதிகாரிகள் யாரும் ஆய்வு மேற்கொள்வதில்லை. மணல் திருட்டு தொடர்பாக வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் … Read more

காவல்துறை சார்பில் அரசு பள்ளியில் விழிப்புணர்வு! உற்சாகத்துடன் கலந்துக்கொண்ட மாணவர்கள்!  

Awareness in the government school on behalf of the police! Students who participated enthusiastically!

 காவல்துறை சார்பில் அரசு பள்ளியில் விழிப்புணர்வு! உற்சாகத்துடன் கலந்துக்கொண்ட மாணவர்கள்! தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானபட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில் தேவதானபட்டி சார்பு  ஆய்வாளர் வேல்மணிகண்டன் முன்னிலையில் இன்று அரசு பள்ளியில் பயிலும் பதினொன்றாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய காவல் ஆய்வாளர் சங்கர் மாணவர்கள் வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது பற்றியும்  மாணவர்கள் … Read more

கடமலை மயிலை ஒன்றியத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!

Vaccination Camp in Kadamalai Peacock Union!

கடமலை மயிலை ஒன்றியத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!  தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவில் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர், கடமலைக்குண்டு, குமணன்தொழு, கோம்பை தொழு, பொன்னம் படுகை, மயிலாடும்பாறை, வருசநாடு, சிங்கராஜபுரம், தும்மக்குண்டு உட்பட 18 ஊராட்சிகளிலும் இம் முகாம் நடைபெற்றது. இதில் முதல் தவணை செலுத்தியவர்கள் இரண்டாவது தவணை செலுத்தவும் இரண்டாவது தவணை செலுத்தி 6 மாத … Read more

சுற்றுலா: சுருளி அருவியில் சுத்தமில்லை, வசூல் நடத்தியும் வசதியில்லை!

Tourism: Suruli waterfall is not clean, collection is not convenient!

சுற்றுலா: சுருளி அருவியில் சுத்தமில்லை, வசூல் நடத்தியும் வசதியில்லை! மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி மாவட்டம் அணைகளும் அருவிகளும் பசுமையும் நிறைந்த பகுதி. குறிப்பாக வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி, மேகமலை அருவி, சுருளி அருவி, சின்னச் சுருளி உள்ளிட்ட அருவிகள் உள்ளன. இதில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மேகமலையில் உருவாகும் சுருளி அருவி வனப்பகுதிகளில் உள்ள மூலிகைச் செடிகளைத் தழுவி வருகிறது. இதன் காரணமாக இந்த நீரைத் தீர்த்தமாகக் … Read more

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான இளைஞர் திறன் திருவிழா! 

Youth Skills Festival for Unemployed Youth!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான இளைஞர் திறன் திருவிழா! தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌவுதியா கல்லூரியில் நேற்று  நடைபெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான இளைஞர் திறன் திருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர்  க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் . என்.ராமகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் தொழிற் திறன் பயிற்சி சேர்க்கைக்கான சான்றிதழ்களை இளைஞர்கள், இளைஞனிகளுக்கு வழங்கினார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.தண்டபாணி, மகளிர் திட்ட அலுவலர் ஜெ.ரூபன் சங்கர்ராஜ், உத்தமபாளையம் வருவாய் … Read more

என் மகனை காணவில்லை கண்டுபிடித்து கொடுங்கள்! போலீசாரின் துரித செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு! 

Find my missing son! Public praise for the quick action of the police!

என் மகனை காணவில்லை கண்டுபிடித்து கொடுங்கள்! போலீசாரின் துரித செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு! தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவானப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசு மாணவர் விடுதியில் தங்கியிருந்த ஆதித்யன் ஒரு வாரத்திற்கு முன்பு, அரசு விடுதியில் இருந்து காணவில்லை என தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் பெயரில் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சங்கர் வழக்கு பதிவு செய்து மாணவன் ஆதித்யனை சார்பு ஆய்வாளர் வேல் மணிகண்டன் தீவிரமாக தேடிவந்தார். இந்நிலையில் … Read more