பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு! முதல்வர் காணொளி காட்சி மூலம் திறப்பு!

A special section for women and children! CM opens with video display!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு! முதல்வர் காணொளி காட்சி மூலம் திறப்பு! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை, அரசு கண் மருத்துவமனையில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர்அரசு மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்நோயாளிகள் நலப்பிரிவினை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்ததை தொடர்ந்து, நலப்பிரிவில் மாவட்ட ஆட்சித்தலைவர்  க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் முன்னாள் சட்டமன்ற … Read more

மாற்றுத்திறனாளிகள் தொடர் உதவித்தொகை பெற இதனை செய்யுங்கள்! தேனி ஆட்சியரின் வேண்டுகோள்!

Do this to get the Disability Continuation Scholarship! Honey collector's request!

மாற்றுத்திறனாளிகள் தொடர் உதவித்தொகை பெற இதனை செய்யுங்கள்! தேனி ஆட்சியரின் வேண்டுகோள்!  தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற்று பயனடைந்து வரும் பயனாளிகள் வாழ்நாள் சான்று பெற்று ஒப்படைத்திட தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் .க.வீ.முரளீதரன்., இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள். தேனி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 75% மற்றும் அதற்குமேல் கடுமையாக உடல் இயக்கம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மனவளர்ச்சி குன்றியவர்கள் தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள மற்றும் முதுகு தண்டுவடம்/பார்கின்சன்/தண்டுவட மரபு … Read more

கண்மாய்களில் முல்லை பெரியாறு தண்ணீரை நிரப்பக் கோரி பேரணி! 

Rally to fill Mullai Periyaru water in Kanmai!

கண்மாய்களில் முல்லை பெரியாறு தண்ணீரை நிரப்பக் கோரி பேரணி! தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதிகளில் உள்ள கண்மாய்களில் முல்லை பெரியாறு தண்ணீரை நிரப்பக் கோரி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக பேரணி நடைபெற்றது.ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் .90 சதவிகிதம் பேர் விவசாயிகளாகவும் ,விவசாயக் கூலிகளாகவும் ,கால்நடை வளர்ப்பவர்களாகவும் உள்ளனர்.  இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இங்குள்ள கண்மாய் ,குளம் ,ஊரணிகளில் தண்ணீர் நிரம்பாததால் … Read more

ஓபிஎஸ் வழக்கில் வெற்றி! இவர்களுக்கெல்லாம் முக்கிய பதவி?

Success in the case of OPS! The main position for all of them?

ஓபிஎஸ் வழக்கில் வெற்றி! இவர்களுக்கெல்லாம் முக்கிய பதவி? அதிமுகவில் ஒற்றை தலைமை என்று பேச்சு ஆரம்பித்தது முதல் உள்ளுக்குள்ளேயே இரு பிரிவினை ஏற்பட்டது. ஓபிஎஸ் இபிஎஸ் என இரு தரப்பினராக பிரிந்தனர். ஆனால் அதிகப்படியான மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பக்கமே ஆதரவு தெரிவித்தனர். ஓபிஎஸ் -க்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கவில்லை. பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன் அதிமுக கட்சி தலைமையகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கினர். அவ்வாறு  தாக்கியதன் பெயரில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் முடிவில் தலைமை செயலகத்தின் … Read more

 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா! தேனியில் வீடுகள் தோறும் தேசியக்கொடி விநியோகம்!

75th Independence Day Elixir Festival! Distribution of national flag to every house in Theni!

 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா! தேனியில் வீடுகள் தோறும் தேசியக்கொடி விநியோகம்! தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வீடுகள் தோறும் இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவிற்கு தேசிய கொடியேற்ற கொடிகள் வழங்கப்பட்டது. தமிழக அரசு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75 வது சுதந்திர தினத்தை அமுதப் பெருவிழாவாக கொண்டாட அறிவுறுத்தி இருந்தது. இதனை அடுத்து இல்லங்கள் தோறும் தேசியக்கொடியினை விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏற்ற வேண்டும் என்று கூறியிருந்தது. இதனை … Read more

தேனி மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி! மாவட்ட ஆட்சியர்  தொடங்கி வைத்தார்!

தேனி மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி! மாவட்ட ஆட்சியர்  தொடங்கி வைத்தார்! தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட நேரு சிலை அருகில் மாவட்ட கலெக்டர் க.வீ.முரளீதரன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே, ஆகியோர் முன்னிலையில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட  போதைப் பொருள் தடுப்பு குறித்த மாபெரும் மனித சங்கிலி விழிப்புணர்வு பணிகளை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். அதனடிப்படையில் தேனி … Read more

தேனி மாவட்டத்தில் புதிய நூலகம்! தொடக்க பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

New library in Theni district! Inaugural work begins today!

தேனி மாவட்டத்தில் புதிய நூலகம்! தொடக்க பணிகள் இன்று முதல் ஆரம்பம்! தேனி மாவட்டம் பெரிய குளம் கீழ வட கரை ஊர் புற நூலகத்திற்க்கு நூலக கட்டிடம் கட்டுவதற்கு காலியிடம் ஒதுக்கி தருவதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி தலைவர் அவர்களிடம் நூலக வாசகர் வட்டம் மூலம் கோரிக்கை மனு அளித்தனர். அதன் அடிப்படையில்கீழ வடகரை ஊராட்சி எல்லைக்குட்பட்ட இடத்தில் சர்வே பணி நடைபெற்றது. இப்பணியின் போது கிராம நிர்வாக … Read more

இலவச கண் சிகிச்சை முகாம்! முதன்மை மாவட்ட நீதிபதி தொடக்கம்!

Free Eye Care Camp! Principal District Judge begins!

இலவச கண் சிகிச்சை முகாம்! முதன்மை மாவட்ட நீதிபதி தொடக்கம்! தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்கம் மற்றும் வாசன் ஐ கேர் இணைந்து மாவட்ட  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் சட்டப்பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு சஞ்சய் பாபா, கண் பரிசோதனை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தலைவர் சாந்தன கிருஷ்ணன் தலைமை வகித்தார்.செயலாளர் செல்வகுமார், பொருளாளர் ஆறுமுகம்,துணைத்தலைவர்கள் பாலமுருகன்,பாஸ்கரன்,இணை, துணை செயலாளர்கள் லோகநாதன், மகாலிங்கம் மற்றும் மூத்த … Read more

சொந்த மாவட்டத்திற்கு செல்ல பாதை இல்லை! பயணம் செய்யும் மக்கள் அவதி!

There is no path to the native district! People who travel suffer!

சொந்த மாவட்டத்திற்கு செல்ல பாதை இல்லை! பயணம் செய்யும் மக்கள் அவதி! பெரியகுளம்: திண்டுக்கல் மாவட்டம் பெரியூர் கிராம மக்கள் சொந்த மாவட்டத்திற்குச் செல்ல பாதை வசதி இல்லாததால், அனைத்து தேவைகளுக்கும் தேனி மாவட்டத்தையே சார்ந்திருக்கும் நிலை உள்ளது. இதற்கான மலைப்பாதையில் சாலை அமைப்பதற்காக கள ஆய்வு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் பெரியூர் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. காபி, வாழை, எலுமிச்சை, ஏலக்காய், அவக்கோடா, காபி உள்ளிட்ட … Read more

 கிணற்றில் விழுந்த  தெருநாய்! அதிரடியாக ஆக்ஷனில் இறங்கிய தீயணைப்புத் துறையினர்! 

Stray dog ​​fell into the well! The fire department in action!

  கிணற்றில் விழுந்த  தெருநாய்! அதிரடியாக ஆக்ஷனில் இறங்கிய தீயணைப்புத் துறையினர்!  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி சுப்புலாபுரம் கிராமத்தில் மையப்பகுதியில் உள்ள 70 அடி ஆழக்கிணற்றில் ஒரு தெருநாய் விழுந்து தத்தளித்து வருவதாக ஆண்டிபட்டி தீயணைப்பு நிலையத்திற்கு  தகவல்வந்தது. இதையடுத்து  உடனடியாக விரைந்துசென்ற ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினர் நாயைக் காப்பாற்ற கயிற்றால் வலையை  கிணற்றில் போட்டு  லாவகமாக வலையை மேலிருந்து இழுத்து நாயை பத்திரமாக மீட்டு வெளியேவிட்டனர்.  தரையைப் பார்த்ததும் மின்னல் வேகத்தில் தாவிக்குதித்து … Read more