ஒரு மரம் வெட்டினால் 10 மரம் நடவேண்டும் :! உயர்நீதிமன்றம் உத்தரவு !!

ஒரு மரம் வெட்டினால் 10 மரம் நடவேண்டும் :! உயர்நீதிமன்ற உத்தரவு !! உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஒரு மரம் வெட்டினால் பத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். நெடுஞ்சாலையை அகலப்படுத்தவதற்காக ஒரு மரம் வெட்டினால் அதற்காக 10 மரங்களை நட வேண்டும் என்றும் ,அப்படி 10 மரங்கள் நட்டு மரக்கன்றுகளை  பராமரிக்க வில்லை என்றால் சாலை விரிவாக்கத்திற்காக எந்த மரமும் வெட்ட வேண்டாம் என்று நீதிபதிகள் … Read more

இருசக்கர வாகனத்தில் சென்றவரை அரிவாளால் தாக்கி வழிப்பறி..! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!!

மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை அரிவாளால் தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மதுரை சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் வீரகனூர் பகுதியில் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள், அவர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் ராஜாவை பயங்கரமாக தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் … Read more

அண்ணன் காதல் திருமணம் செய்ததற்கு தம்பிக்கு தூக்கு:! காவல்துறையின் அத்துமீறல்!

அண்ணன் காதல் திருமணம் செய்ததற்கு தம்பிக்கு தூக்கு:! காவல்துறையின் அத்துமீறல்! சதுரகிரி மகாலிங்கம் கோவில் மலையடிவார வாழைத்தோப்பு பகுதியில்,மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மலையடிவார பகுதியில் வசிக்கும் கன்னியப்பன் என்பவருடைய மகன் ரமேஷ் என்பவர், இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகின்றார்.ஒரு மாதத்திற்கு முன்பு ரமேஷின் அண்ணன் இதயக்கனி என்பவர் இவர்களின் உறவுக்கார பெண்ணான புனிதாவை காதலித்து திருமணம் செய்துள்ளனர். குடும்பத்தை … Read more

உடலில் 13 இடத்தில் கத்திக்குத்து:! 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! பிணமாக உடல் மீட்பு!

உடலில் 13 இடத்தில் கத்திக்குத்து:! 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! பிணமாக உடல் மீட்பு! மதுரை மாவட்டம் வி.அம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தவுடன் குடும்பத்தினர்.இவரின் மனைவி முத்துலட்சுமி.இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.இவர்களது மகள் ஜெய்சக்தி பாலா. இவருக்கு 17 வயதாகும் நிலையில், ஜெய்சக்தி பாலாவிற்கு கடந்த 7 மாதத்திற்கு முன்னர்,விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மத்திய சேவை பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் தொடர்பான தகவலை அறிந்த காவல்துறையினர் விரைந்து … Read more

போலி போலீஸ் நடத்திய அரசு வேலை நாடகம்:! கோடிக்கணக்கில் பணம் கொள்ளை! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பிஇ பட்டதாரிகள்!

போலீஸ் உடை,போலீஸ் கார், கையில் துப்பாக்கி,என காவல் ஆணையர் அலுவலகம் முன்பு கம்பீரமாக உலா வந்து,அரசு வேலை வாங்கித் தருவதாக,பட்டதாரிகளை ஏமாற்றி கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் காளிதாஸ்.இவர் ஒரு பொறியியல் பட்டதாரி.இவரிடம் மதுரை மேல்பொனாகரத்தைச் சேர்ந்த சக்திவேல் பாண்டிராஜன் என்பவர்,மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரியாக பணி புரிவதாகவும்,தனது மனைவி காமேஸ்வரி என்பவர், மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகாரியாக வேலை பார்ப்பதாகவும் கூறி,காளிதாஸ்யிடம் ஆசை வார்த்தைகள் பேசி அவருக்கும்,காவல் ஆணையர் … Read more

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: பயிர்கள் சர்வநாசம்!! கலக்கத்தில் விவசாயிகள்..!

உசிலம்பட்டி அருகே வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மாட்டுத்தீவன பயிர்களை ஆயிரக்கணக்கில் படையெடுத்து வந்த வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக சில வெட்டுக்கிளிகள் மட்டும் தென்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில், தற்போது ஆயிரக்கணக்கில் வெட்டுக்கிளிகள் படை எடுத்து வந்ததால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இது குறித்து … Read more

இன்று (7.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்

பெட்ரோலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஒட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் வாங்கும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. பெட்ரோல் மட்டும் அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம்தோறும் இடத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே வருகின்றது. அதன்படி இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு … Read more

பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாட பிள்ளையாராக மாறி கோரிக்கை விடுத்த மக்கள்?

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்ததுள்ளது.நோய் பரவுதலின் வீரியத்தை தடுக்கும் வகையில் அனைத்து மதம் சார்ந்த விழாக்களும் ஒத்திவைக்கப்பட்டது. ஆகஸ்ட் 24ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் நிலையில்,மதுரை மாவட்ட மக்கள்,விநாயகர் சதுர்த்தி தினத்தன்று கொரோனாவை விரட்ட யாகம் வளர்க்க அனுமதி கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புள்ளையார் வேஷம் போட்டுக்கொண்டு மனு அளிக்க சென்றனர்.பிள்ளையார் வேடத்தில் வந்த அவர்களை கண்டு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

No means No என்னும் டயலாக்கிற்கு ஏற்றவாறு பாலியல் தொல்லை கொடுத்த கணவனை ஆணுறுப்பில் அடித்து கொலை செய்த மனைவி?

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சுந்தர் என்கிற சுதீர் வசித்து வருகின்றார்.இவருக்கு வயது 34.இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு அருள்செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.இருவருக்கும் ஜெய்ஸ்ரீ என்ற மகள் உள்ளார். சுந்தர் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்.இவரின் மனைவி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4மணி அளவில் கட்டிலிலிருந்து கீழே விழுந்து மயங்கியதாக கூறி மருத்துவமனையில் சுந்தரின் பெற்றோர் அனுமதித்துள்ளனர்.சுந்தரை பரிசோதித்த … Read more

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புரோட்டா மாஸ்க் விற்பனை

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளில் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு விதிமுறை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் அடுத்த ஒரு வருடத்திற்கு சில தளர்வுகளுடன் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் சமூக இடைவெளி போன்ற … Read more