ரஜினி, சிறுத்தை சிவா காம்போவில் உருவாகும் படத்தின் தலைப்பு : வெளியான தகவல்… ரசிகர்கள் குஷி !

ரஜினி, சிறுத்தை சிவா காம்போவில் உருவாகும் படத்தின் தலைப்பு :வெளியான தகவல் ! ரசிகர்கள் குஷி ! ரஜினி தற்போது நடித்து வரும் படத்தின் தலைப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் தர்பார் திரைப்படம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் நன்றாக கல்லா கட்டி வருகிறது. இதையடுத்து ரஜினி தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க, ரஜினியின் ஆஸ்தான கதாநாயகிகளான மீனா, குஷ்பு ஆகியோர் அவருடன் பல … Read more

ரஜினியுடன் போனில் பேசிய சுப்பிரமணியம் சுவாமி: என்ன பேசினார்கள்?

தந்தை பெரியார் குறித்து சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் ரஜினிகாந்த் பேசியதாக அவரை அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இருப்பினும் தான் பேசியது உண்மைதான் என்றும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்புக் கேட்கவோ முடியாது என்றும் நேற்று ரஜினிகாந்த் பேட்டி அளிக்க ரஜினியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஜினிகாந்த் உள்பட நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக மூத்த தலைவர் … Read more

இப்பவே இப்படியா?அப்ப அரசியல்ல இறங்குனா? ரஜினிய வச்சு செய்யும் பெரியாரிஸ்ட்கள்!

இப்பவே இப்படியா?அப்ப அரசியல்ல இறங்குனா? ரஜினிய வச்சு செய்யும் பெரியாரிஸ்ட்கள்! துக்ளக் விழாவில் பேசி சர்ச்சையைக் கிளப்பிய ரஜினி அதற்கு விளக்கம் அளிக்கிறேன் என்று இன்று பேசி மீண்டும் சர்ச்சையைப் பெரிதாக்கியுள்ளார். துக்ளக் 50 ஆவது ஆண்டுவிழாவில் பேசிய ரஜினி ‘சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ராமர் மற்றும் சீதை ஊர்வலம் பற்றி சிலக் கருத்துகளைப் பேசி சர்ச்சைகளைக் கிளப்பினார். அதற்குப் பெரியாரியவாதிகள் மற்றும் திமுகவினர் ஆதாரப்பூர்வமான விளக்கங்களை வெளியிட்டு மறுப்புத் தெரிவித்தனர். மேலும் … Read more

ரஜினியின் ஹிட்படத்தின் பார்ட் 2 ல் தனுஷ் : ஜோடியாக கீர்த்தி சுரேஷ் !

ரஜினியின் ஹிட்படத்தின் பார்ட் 2 ல் தனுஷ் : ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ! ரஜினி நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளியான நெற்றிக்கண் படத்தின் பார்ட் 2 வில் தனுஷ் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இப்போது கதைப்பஞ்சம் அதிகளவில் உள்ளது. அதனால் கதைத் திருட்டு பிரச்சனைகள் ஒருப்பக்கம் எழ, மற்றொரு பக்கம் ரீமேக் மற்றும் பார்ட் 2 படங்களும் வரிசைக் கட்டி உருவாகி வருகின்றன. ஆனால் அவை எதிர்பார்த்தபடி வெற்றி … Read more

ரஜினியை வெளுத்து வாங்குவது ஏன் ? உதயநிதி ஸ்டாலின் மழுப்பல் பதில் !

ரஜினியை வெளுத்து வாங்குவது ஏன் ? உதயநிதி ஸ்டாலின் மழுப்பல் பதில் ! மறைந்த பத்திரிகையாளர் மற்றும் நடிகர் சோ ராமசாமி அவர்கள் தொடங்கிய துக்ளக் பத்திரிகையின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’சோ வாசகர் வட்டத்தை உருவாக்க வில்லை அவர் ஒரு இனத்தை உருவாக்கினார்.  ஒருவர் முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்று சொல்வார்கள். ஆனால் துக்ளக் வைத்திருந்தால் … Read more

தென் இந்தியாவில் தப்பித்த தர்பார் ! வட இந்தியாவில் மண்ணைக் கவ்வியது : கலக்கத்தில் விநியோகஸ்தர் !

தென் இந்தியாவில் தப்பித்த தர்பார் ! வட இந்தியாவில் மண்ணைக் கவ்வியது : கலக்கத்தில் விநியோகஸ்தர் ! தர்பார் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும் கையைக் கடிக்காத வசூல் வந்துள்ள நிலையில் வட இந்தியாவில் படுதோல்வி அடைந்துள்ளது. பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான தர்பார் முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்கள் பெற்றதால் கூட்டம் குறைய ஆரம்பித்தது. முதல் நாளின் மாலை மற்றும் இரவு காட்சிகளில் டிக்கெட்கள் சர்வ சாதாரணமாகக் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் முதல்நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு … Read more

கருப்பு சட்டைப் போட்டுவரக் கூடாது – ரஜினி கலந்து கொள்ளும் விழாவில் கட்டுப்பாடு !

கருப்பு சட்டைப் போட்டுவரக் கூடாது – ரஜினி கலந்து கொள்ளும் விழாவில் கட்டுப்பாடு ! நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் துக்ளக் பத்திரிகையின் ஐம்பதாவது ஆண்டு தொடக்க விழாவில் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மறைந்த பத்திரிக்கையாளர் மற்றும் நடிகர் சோ ராமசாமி அவர்கள் நடத்தி வந்த துக்ளக் பத்திரிக்கை  50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதை முன்னிட்டு தற்போதைய நிர்வாகம் அதை இன்று மாலை கொண்டாட முடிவு செய்துள்ளது. இதில் சூப்பர் … Read more

முருகதாஸூம் ரஜினியும் எத்தனை நாள் சிறையில் இருந்தார்கள் ?சீமான் ஆவேசம் !

Seeman-News4 Tamil Online Tamil News

முருகதாஸூம் ரஜினியும் எத்தனை நாள் சிறையில் இருந்தார்கள் ?சீமான் ஆவேசம் ! தர்பார் படத்தில் வைக்கப்பட்டு இருந்த காசு இருந்தால் சிறையில் இருந்து வெளியே போய் ஷாப்பிங் கூட செய்யலாம் என்ற வசனம் தொடர்பாக சீமான் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக கலவையான விமர்சனங்களையும் சுமாரான வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு காட்சிக்காக இப்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. படத்தில் சிறையில் செல்போன் … Read more

கையைக் கடிக்கும் தர்பார் வசூல் – விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி !

கையைக் கடிக்கும் தர்பார் வசூல் – விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி ! தர்பார் படத்தின் முதல் நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் விநியோகஸ்தர்கள் நஷ்டம் ஏற்படும் எனப் புலம்ப ஆரம்பித்துள்ளனர். பெரிய நடிகர்கள் படங்கள் ரிலிஸாகும் அதை அதிக விலைக்கு வாங்கி அதிக டிக்கெட் கட்டணத்தில் விற்று அதிக லாபம் பார்க்கலாம் என விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டு கையை சுட்டுக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலை இப்போது தர்பார் படத்துக்கு வருமோ என்ற சூழல் உருவாகியுள்ளது. … Read more

முருகதாஸுக்கு இதே வேலை தான்! கடுப்பான ரசிகர்கள்

முருகதாஸுக்கு இதே வேலை தான்! கடுப்பான ரசிகர்கள் ஒரு வசனத்தை வைப்பதும் பிறகு பிரச்சனை வந்தால் அதை நீக்குவதும் இதுவே முருகதாஸூக்கு வேலையாக இருக்கிறது என ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். தர்பார் படத்தில் சிறையில் செல்போன் உபயோகிப்பது சம்மந்தமான காட்சி ஒன்றில் ’இது என்ன சிறையில் இருந்த படி ஷாப்பிங்கே செய்யலாம்’ என ஒரு வசனம் வரும். இதற்கு சசிகலாவின் ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க அந்த வசனம் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் சிறையில் … Read more