நாடே விமர்சித்து வரும் விவசாய மசோதா குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss

நாடு முழுவதும் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் விவசாய மசோதா குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல்,லாபத்துடன் கூடிய விலையை அரசு சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்! என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட உழவர்களின் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (மேம்பாடு மற்றும் வசதிகள்) மசோதா, உழவர்களுக்கான (அதிகாரமளித்தல் … Read more

திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக பொன். ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி-மதுரை நெடுஞ்சாலையில் 70 அடி உயர பாஜக கொடி ஏற்றப்பட்டது. இதனை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஏற்றிவைத்தார். மேலும் ஏழை எளியோருக்கு வேட்டி சேலைகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.” நீட் தேர்வு விவகாரத்தில் அச்சத்தில் மாணவர்கள் உயிரிழப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினர் பிணந்தின்னி கழுகுகளைப் போல அலைகின்றனர். அரசியல் கட்சியினர் குழப்பம் நீட் … Read more

ஒரே அறிக்கையில் ஒட்டுமொத்த பிஜேபி அதிமுகவையும் கிழித்து தொங்க விட்ட நடிகர் சூர்யா!!

ஒரே அறிக்கையில் ஒட்டுமொத்த அரசியலையும் கிழித்து தொங்க விட்டு கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா! தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,   “நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்லும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா காலத்திலும் தங்கள் தகுதியை நிரூபிக்க தேர்வெழுத நிர்பந்திக்கப்படுகிறார்கள்.   … Read more

இந்தி திணிப்பை கட்டாயமாக அமல்படுத்தும் பாஜகவிற்கு வைகோ விடுத்த இறுதி எச்சரிக்கை!!

பாஜகவின் மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் கட்டாய இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.   மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தியை அலுவல் மொழியாக வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில் அதற்கென்று தனியாக இந்தி ஆட்சி மொழிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது.   மேலும், மத்திய அரசு அலுவலகக் … Read more

“பாஜக என்ற பெரிய கட்சிக்குள் ரஜினி வந்தால் எதுவும் மாறாது” பாஜக நிர்வாகியின் அதிரடி விளாசல்

தமிழகத்தில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திராவிட கட்சிகளிலிருந்தும், வெவ்வேறு கட்சிகளில் இருந்தும் விலகிய நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக ராதாரவி, கு.க. செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில், நேற்று பாஜகவின் சென்னை தலைமையகமான கமலாலயத்தில் நடந்த கட்சியில் இணைப்பு விழாவுக்கு அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளரான கரு. நாகராஜன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கரு. நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் … Read more

கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கு வசந்தகுமார் மகனே தயார்: பாஜகவில் அடம்பிடிக்கும் நயினார் நாகேந்திரன்

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் காலமானதால், தற்போது அந்த தொகுதி காலியாகி உள்ள நிலையில் அங்கு போட்டியிட மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் முடிவெடுத்துள்ளார்.   இந்த நிலையில், பாஜக சார்பில் அங்கு களம் இறங்க நயினார் நாகேந்திரன் தற்போதிருந்தே கட்சித் தலைமைக்கு நிர்பந்தித்து வருகிறார். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் இல்லாத ஒரே மாவட்டமாக கன்னியாகுமரி உள்ளது. அங்கு மட்டும்தான் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி ஆகிய கட்சிகளே மாறி மாறி இருந்து வருகிறது. … Read more

தேர்தலில் பாஜகவின் முகமாக அண்ணாமலைக்கு தொகுதி ஒதுக்கீடு! திமுகவை விழிபிதுங்க செய்வாரா?

வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் முகமாக இருக்கப்போவது அண்ணாமலையே. கட்சியில் இணைந்த நான்கே நாட்களில் துணைத் தலைவரான அண்ணாமலைக்கு தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   தேர்தலின் போது கட்சியில் அவருக்கு மேலும் பிரச்சாரக்குழு தலைவர் அல்லது வேறு ஏதாவது முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்கிறார்கள்.   மேலும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதாலேயே அண்ணாமலை தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.   அதன் அடிப்படையிலேயே அண்ணாமலையின் சொந்த ஊரான கரூர் … Read more

“பாஜக தமிழகத்தில் சசிகலாவை வைத்து ஓட்டுக்களை பிரிக்கத் திட்டம்”: கே.எஸ்.அழகிரி காட்டம்

சசிகலாவை பயன்படுத்தி அதிமுகவையும், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் களத்தையும் பலவீனப்படுத்தி, ஓட்டுக்களை பிரிக்க இருப்பதாக ஆளும் பாஜக அரசும், மோடியும் முயற்சிக்கின்றனர் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் எனவும், பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும் என எச்.ராஜா, எல்.முருகன் போன்றோர் கூறிவருகின்றனர்.   இந்தநிலையில், திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: “கொரோனா ஊரடங்கினால்  சிறு … Read more

பாஜகவிற்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுத்துகிறது? விளக்கமளிக்கும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் தளத்தில் பாஜகவினர் ஆதிக்கம் செலுத்தி வருவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து அந்த நிறுவனம் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இன்று விளக்கமளிக்க உள்ளது.   சமீபகாலமாக சமூகவளைத்தளமான பேஸ்புக்கில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   அந்தவகையில், பாஜக கட்சிக்கு எதிரான கருத்துக்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கி வருவதாகவும், இந்திய அரசியலில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும்,   அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வால் ஸ்ட்ரீட் ஜூர்னல் பத்திரிக்கையில் கட்டுரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த … Read more

அதிமுக உடனான தேமுதிக மற்றும் பாஜக கட்சிகளின் கூட்டணி நீடிக்குமா!

அதிமுக உடனான தேமுதிக மற்றும் பாஜக கட்சிகளின் கூட்டணி நீடிக்குமா! கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து தேர்தல்களத்தில் களமிறங்கியது.தற்போது சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதிமுக உடனான கூட்டணி குறித்து தேமுதிக மற்றும் பாஜக கட்சிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.இந்த இரண்டு கட்சிகளும் அதிமுக உடனான கூட்டணி குறித்து இருவேறு கருத்துக்களை கூறியிருப்பது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அண்மையில் தேமுதிக … Read more