வாழ்ந்து காட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல்! முதலமைச்சர் வெளியிட்ட காணொளி செய்தி!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் வாழ்ந்து காட்டுவதன் மூலமாக தான் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த இயலும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அத்துடன் அண்மைக் காலமாக நாம் அதிகமாக கேள்விப்படும் செய்தி இதுதான் இதுபோன்ற செய்திகள் என்னை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகி கொண்டிருக்கிறது. பெண்கள், குழந்தைகள், மீதான பாலியல் வன்முறைகளும் , அதைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதும், … Read more

மீண்டும் வேகம் எடுக்கும் கனமழை! அவசர ஆலோசனையில் இறங்கும் முதலமைச்சர்!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதன் தாக்கம் சற்று குறைந்து வருகின்ற சூழ்நிலையில், நாளைய தினம் முதல் தமிழ்நாட்டுக்கு மறுபடியும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் விரும்பினார் என்று … Read more

கோவை மாநாட்டில் 52 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்ட இருக்கக்கூடிய ஒரு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக அரசின் தொழில்துறை சார்ந்த முதலீட்டாளர்கள் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரிலான முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று கோவை கொடிசியா வளாகத்தில் நடந்தது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த மாநாட்டின் மூலமாக 82 திட்டங்கள் 52 ஆயிரத்து 549 கோடியில் புதிதாக வர உள்ளது இதன் மூலமாக 8,420 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 34 ஆயிரத்து 223 … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு கூடும் அமைச்சரவை கூட்டம்!

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய மழை வெள்ள பாதிப்பு காரணமாக, ஆலோசனை செய்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால் தொடர் மழை காரணமாக, அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது முதலில் நேற்று மாலை 5 மணிக்கு கூட இருந்த இந்த அமைச்சரவை கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் … Read more

அன்பு பரிசளித்த மகன் ஆர்வமில்லாத முதலமைச்சர்!

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் போன்ற சொகுசு கார்களை பயன்படுத்திவந்த முதலமைச்சரின் திடீரென்று ஜாகுவார் லேண்ட் க்ரூஸர் காருக்கு மாறி உள்ளார் சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த காரை முதல்வர் ஸ்டாலினுடைய மகனான உதயநிதி வாங்கி தந்தை ஸ்டாலினுக்கு பரிசாக கொடுத்து இருப்பதாக அறிவாலயத்தில் செய்தி வெளியாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி உதயநிதிக்கு சொந்தமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெயரில் TN.01 BV2345 என்ற எண்ணில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் இந்த … Read more

மழை வெள்ள பாதிப்பு! முதல்வர் தலைமையில் கூடும் அமைச்சரவை கூட்டம்!

மழை வெள்ள பாதிப்பு, அதனால் ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புகள் மற்றும் நிவாரணம் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக நாளை மறுதினம் முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட இருக்கின்றது. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து மிகப்பெரிய சேதங்களை உண்டாக்கி இருக்கிறது. இடங்களில் வீடுகள், குடிசைகள் உள்ளிட்டவை சேதமடைந்து இருக்கின்றன. டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது, மழை வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கிவிட்டன. இந்த சூழ்நிலையில். நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை … Read more

மழையால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர்!

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக, தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் கடுமையான மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக, ஏரி, குளங்கள் உள்ளிட்டவை நீரால் நிரம்பின, உபரிநீர் திறந்து விடப்பட்டது. மழை வெள்ளத்தால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் விவசாயம் மிக கடுமையாக பாதிக்கப் அதோடு நிற்பதில் அது தொடர்பாக ஆய்வு … Read more

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை! காப்பாற்றுவாரா முதலமைச்சர்?

பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பாக நாம் விரும்பும் சென்னை என்ற தலைப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிவியல்பூர்வமான வழிகாட்டுதல் ஆவணத்தை வெளியிட்டார். சென்னை மறுபடியும் ஒரு வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதன் அடிப்படையில் புதிய நகர்புற மாதிரி இடம்பெற்றிருந்தது என சொல்லப்படுகிறது. நீர்வள மேலாண்மை ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மை உள்ளிட்ட தலைப்புகளில் தலைநகர் சென்னையை மழை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாப்பது தொடர்பான கட்டமைப்பு … Read more

சொன்னதை செய்வாரா முதலமைச்சர்? நக்கலாக கேள்வி எழுப்பும் பொதுமக்கள்!

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சொன்னதை செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்றெல்லாம் தெரிவித்து பொதுமக்களை பிரைன் வாஷ் செய்து ஆட்சியை அமர்ந்தவர்கள் சொல்லாததையும் செய்து வருவதை பொது மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என தெரிவிக்கிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமயத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 2000 ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். சென்னை எம்ஜிஆர் நகரில் அந்த நிவாரணத் தொகையை வாங்க முண்டியடித்துக் கொண்டு … Read more

மழை வெள்ள சேதம்! கன்னியாகுமரி மாவட்டத்தை ஆய்வு செய்த முதலமைச்சர்!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகின்றது. வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைந்த காற்றழுத்தம் காரணமாக, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களை அடுத்து தற்சமயம் பெய்து வரும் மழையின் காரணமாக, அதிகமாக பாதிக்கப்பட்டது. கன மழையால் பாதிக்கப்பட்ட சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை மற்றும் திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு … Read more