நாங்க நாகரிகம் இல்லாதவர்களா? நாவடக்கம் வேண்டும் அமைச்சரே! – சீறிய முதல்வர் ஸ்டாலின்!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. இந்த அமர்வில், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தேசிய கல்விக் கொள்கையின் காரணமாக தமிழகத்திற்கு ₹2,152 கோடி நிதி வழங்கப்படாமல் இருப்பது மாணவர்களை பாதிக்கக்கூடியது எனக் குறிப்பிட்டார். மேலும், “மாநிலங்கள் எந்த ஒரு கொள்கையையும் நிராகரித்தால், அதற்காக மத்திய அரசு நிதியை மறுக்கலாமா?” என்ற கேள்வியை அவர் எழுப்பினார். மத்திய அரசின் பதில் … Read more

இருமொழிக் கொள்கையில் தமிழ் மற்றும் இந்தி மொழியா? பதிலளிக்க உயர்நீதிமன்றம் கெடு

தமிழக அரசின் இரு மொழிக் கொள்கையில் எந்தமொழி இரண்டாவதாக இருக்கும் என்பது தொடர்பாக அரசின் சார்பில் விளக்கம் அளிக்க தலைமைச் செயலாளர் அல்லது பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரமாணப் பத்திரம் ஒன்றினைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரித்து வருகிறது. இதில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின் படி மும்மொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும் … Read more