செலுத்தப்பட்டது அபராதத் தொகை! சசிகலா விரைவில் விடுதலை!

சசிகலாவுடைய அபராதத்தொகையை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர் நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தகவல் தெரிவித்திருக்கின்றது. இந்த செய்தி சசிகலாவை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. சசிகலாவுடைய தண்டனை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து சிறை விதிகளின்படி சென்ற ஆகஸ்ட் மாதமே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனாலும் சசிகலா விடுதலை சம்பந்தமாக கர்நாடக சிறைத்துறை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. சசிகலாவிற்கு அபராதமாக விதிக்கப்பட்ட 10 10 கோடி ரூபாயை செலுத்தி விட்டால் அவர் முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று … Read more

கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும்! எளிமையாக நடந்துகொண்ட தினகரன் காரணம் இதுதான்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான, டிடிவி தினகரன் ஒரே மகள் ஜெய ஹரிணி. இவருக்கும், தஞ்சாவூர் முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் துளசி வாண்டையார் அவர்களின் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களின் மகனுமான, ராமநாதன் துளசி ஐயா வாண்டையாருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்வில், டிடிவி தினகரனின் சகோதரர் பாஸ் என்கின்ற பாஸ்கரன், உள்பட இரு குடும்பத்தாரின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமே கலந்து … Read more

ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் கூறிய முக்கிய தகவல்! அதிர்ச்சியில் தமிழகம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4 ஆம் தேதி மாலையே இறந்துவிட்டார் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஒரு பரபரப்புத் தகவலை தெரிவித்து இருக்கின்றார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கல்வித்துறையில் உரிய நடைமுறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு பள்ளி தீர்ப்புகள் சம்பந்தமாக, பேசிக்கொண்டிருப்பது சரியல்ல அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை ஸ்டாலினை பாராட்டிய போது நான் திமுகவில் இணையபோவதாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்தார். நல்லதை யார் செய்தாலும் பாராட்டுவேன் என்று … Read more

இரண்டு நாட்களில் தெரிந்துவிடும் சசிகலாவின் விடுதலை விவரம்! முக்கிய தகவல்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இது தொடர்பான விவாதங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரிதாக வெடித்துள்ளன. இந்தநிலையில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கூறியதால் சசிகலாவின் விடுதலை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அபராத தொகையை செலுத்த சசிகலா தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. இருந்த போதிலும் அதற்கு முன்னதாகவே அவரை வெளியே கொண்டுவர டிடிவி தினகரன் … Read more

தெய்வத்தின் ஆசியோடு விரைவில் வெளியே வருவேன்…..! சசிகலா அதிரடி …..!

சசிகலாவின் விடுதலை பற்றி தினமும் ஒவ்வொரு தகவல் வந்தவண்ணம் இருக்கின்ற நிலையில், அவரின் உடலை சம்பந்தமாக அடிக்கடி வெளிவரும் தகவலால், அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது சம்பந்தமாக விளக்கமளித்து கடிதம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி விடுதலை ஆகப் போவதாக தகவல் வெளியானது ,அதன்பின்பு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி விடுதலை ஆவார் என்று தெரிவிக்கப்பட்டது. … Read more

சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சசிகலா என்பவர் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக 2017 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர். ஆனால் சசிகலா மற்றும் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா உள்பட சிலர் மீது வருமானத்திற்கு மேல் சொத்துக்களை குவித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கு உச்ச நீதிமன்றம் இவர்களை குற்றவாளி என்று தீர்ப்பளித்து தண்டனை அளித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது தண்டனையில் இருக்கும் சசிகலா அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்றும் சசிகலா வெளியில் வந்தால் அரசியலில் மாற்றம் ஏற்படும் என்றும் … Read more

சசிகலா விடுதலை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தாதாம்! சொன்னது யார் தெரியுமா?

சசிகலாவின் விடுதலை அரசியலில் எந்த ஒரு அதிரடி மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரா.முத்தரசன் கூறியுள்ளார். மேலும் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் கூறியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பொருந்தாத வண்ணம் மத்திய அரசு திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும் அனைத்து விவசாயிகளையும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் வகையில் விவசாய விரோத சட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும் மேலும் இந்த சட்டங்களுக்கு எதிராக வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தப் … Read more

டிடிவி தினகரன் டெல்லிக்கு திடீர் பயணம்! சசிகலா விடுதலைக்கா?

சொத்துக்குவிப்பு வழக்கினால் கைதான சசிகலா தற்போது தண்டனை பெற்று சிறையில் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் வருகின்ற ஆண்டு ஜனவரி, 27ம் தேதி விடுவிக்கப்படுவார் என்று  பெங்களூர், பரப்பன அக்ரஹார  சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு விடுவிக்கப்பட வேண்டும் என்றால் ரூபாய் 10 கோடி தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது.  அவ்வாறு பணம் செலுத்தவில்லை என்றால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது. இன்று காலை டிடிவி தினகரன் … Read more

#BreakingNews:சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகும் நாள் வெளியீடு:! பெங்களூர் சிறைத் துறையின் அதிகாரபூர்வத் தகவல்!

#BreakingNews:சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகும் நாள் வெளியீடு:! பெங்களூர் சிறைத் துறையின் அதிகாரபூர்வத் தகவல்! அதிமுக கட்சி பிரமுகரான சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.இவருக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் நான்கு ஆண்டு சிறை தண்டனையும் வழங்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக சசிகலா சுதந்திர தினத்திற்கு முன்பே விடுதலை ஆவார் என்ற செய்தி வைரல் ஆகியது. இவர் சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுக … Read more

“சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை வந்தால் விரட்டி அடிப்போம்” கே.பி.முனுசாமி ஆவேச பேச்சு

சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை. கட்சியிலும் நுழைய முடியாது என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இதில் சசிகலா விடுதலையான பிறகு அதிமுகவிலோ, தமிழக அரசியலிலோ எந்த மாற்றமும் ஏற்படாது என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். எந்த ஒரு சூழ்நிலையிலும் சசிகலாவால் இனி அதிமுக கட்சிக்குள் நுழையமுடியாது என்றும், தன்னை பொறுத்தவரை சசிகலா என்றும் ஜெயலலிதாவின் உதவியாளர் மட்டுமே தான் எனவும் தெரிவித்திருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பார்ப்பன அக்ரஹாரா சிறையில் … Read more