பாஜகவுடன் கூட்டணியா?!.. எதற்காக சந்திப்பு?.. அமித்ஷா சந்திப்பு பற்றி பேசிய எடப்பாடி பழனிச்சாமி!..

admk

சில நாட்களுக்கு முன்பு ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அப்போது முடிவெடுப்போம்’ என சொன்னாரே தவிர ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை ஏற்கனவே சொல்லிவிட்டோம்’ என அவர் சொல்லவில்லை. அதோடு, கொள்கை வேறு.. கூட்டணி வேறு என்றும் பேசியிருந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என பலரும் நினைத்தார்கள்.இந்த நிலையில்தான் நேற்று காலை அவசரமாக டெல்லி புறப்பட்டு … Read more

சவுக்கு சங்கர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!.. உண்மை வெளியே வருமா?!…

savukku shanakr

Savukku shankar: சவுக்கு எனும் யுடியூப் சேனல் மற்றும் இணையதளத்தை நடத்தி வருபவர் சங்கர். மிகவும் நேர்மையான, தைரியம் மிக்க பத்திரிக்கையாளர் இவர். யார் என்ன தவறு செய்திருந்தாலும் அதை அப்படியே சுட்டி காட்டுவார். இதனால் அரசியல்ரீதியாக நிறைய எதிர்ப்புகளை சம்பாதித்தார். குறிப்பாக திமுகவினரும், திமுக ஆதரவாளர்களும் இவரை கடுமையாக விமர்சனம் செய்வார்கள். ஏனெனில், கடந்த சில வருடங்களாகவே இவர் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில்தான், சவுக்கு சங்கரின் வீட்டை நேற்று ஒரு கும்பல் சூறையாடியது. … Read more

சவுக்கு சங்கர் வீட்டில் மலத்தை கொட்டிய கும்பல்!. பின்னணியில் யார்?…

savukku shankar

திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர். இதனால் இவரை 6 மாதங்கள் குண்டர் சட்டத்தில் அடைத்தனர். கரூரில் செந்தில் பாலாஜி பினாமி பெயரில் இடம் வாங்கி பிரம்மாண்ட மாளிகையை கட்டி வருகிறார் என்கிற செய்தியக் ஊடகங்களில் வெளிக்கொண்டு வந்தவர்தான் சவுக்கு சங்கர். இதனால், செந்தில் பாலாஜியின் தூண்டுதலின் பேரில்தான் தான் கைது செய்யப்பட்டதாக அப்போது சொன்னார் சவுக்கு சங்கர். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் திமுகவை மீண்டும் கடுமையாக விமர்சனம் … Read more

ரவுடியெல்லாம் அமைச்சரானா இப்படித்தான்!.. சேகர்பாபுவை தாக்கும் அண்ணாமலை!…

annamalai

தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட்ட வேண்டும் என பாஜக கருதுகிறது. தமிழக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கு பின் தமிழகத்தில் கால் ஊன்றும் வேலையில் பாஜக தீவிரமாக இறங்கியது. முதலில் அதிமுகவை கட்டுப்படுத்த துவங்கியது. பாஜக தலைமை என்ன சொல்கிறதோ அதை எடப்பாடி பழனிச்சாமி பின்பற்ற துவங்கினார். ஒருபக்கம் சசிகலாவை சிறைக்கு அனுப்பியதோடு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியை விட்டே நீக்கினார்கள். அதன்பின் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சில தேர்தல்களில் … Read more

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூடிய முதலமைச்சர்கள்!. யார் யார் வராங்க தெரியுமா?…

கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று 3வது முறையாக பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. யார் பிரதமர் என தேர்ந்தெடுப்பது பாராளுமன்ற உறுப்பினர்கள்தான். இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போட்டியாளர்கள் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த முறை இந்த 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றிருக்கிறார்கள். ஆனால், மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் அவர்களிடம் எதையும் கேட்டு பெறமுடியவில்லை. 39 எம்.பி.க்கள் இருந்தும் ஒரு … Read more

உங்க வீட்டு பிள்ளையா நினைச்சி மன்னிச்சிடுங்க!.. சரண்டர் ஆன சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!…

sivaji

திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருப்பவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. வாயை திறந்து பேசினால் கெட்ட வார்த்தைகள் சரளமாக கொட்டும். ஆனால், அதை ரசிக்கவே ஒரு கூட்டம் இருப்பதால் திமுக தலைமை இவர் ,மீது பெரிதாக எந்த நடவடிகையும் எடுக்காது. திமுக மேடைகளில் அசிங்கமாக பேசி சர்ச்சைகளில் சிக்குவார். மற்ற கட்சியினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தால் திமுக இவர் மீது நடவடிக்கை எடுப்பது போல பாவ்லா காட்டிவிட்டு பின்னர் மீண்டும் அவரை திமுக மேடைகளில் பேச விடுகிறார்கள். சில … Read more

பழனிச்சாமியை தவிர்க்கும் செங்கோட்டையன்!. கொங்கு மண்டலம் கையை விட்டு போகுமா?..

eps

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்டம் ஆட துவங்கிவிட்டது. ஏற்கனவே முன்னாள் முதல் ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். ஒருபக்கம் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்கள். இந்நிலையில்தான் செங்கோட்டையனும் போர்க்கொடி தூக்க துவங்கியிருக்கிறார். அதிமுக தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தபின் அவரின் சில செயல்பாடுகள் செங்கோட்டையனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு சில நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார் செங்கோட்டையன். அடுத்து அதிமுக அமைச்சர் … Read more

சீமானை எவ்ளோதான் அடிப்பீங்க. மனுஷன் நொந்து போயிட்டாரு!. முட்டு கொடுக்கும் அண்ணாமலை!…

annamalai

தமிழக அரசியலில் திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் நபர்களில் நாம் தமிழக கட்சியை நடத்தி வரும் சீமான் முக்கியமானவர். இவரை போல திமுகவை கடுமையாக விமர்சித்தவர் யாருமில்லை என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக திராவிடத்தை அவர் கடுமையாக எதிர்க்கிறார். சென்னை மெரினா கடற்கரையை திராவிட சுடுகாடாக மாற்றிவிட்டர்கள் என சொன்னவர் சீமான். கடந்த 10 வருடங்களாவே யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனது கட்சி நிர்வாகிகளை தேர்தலில் நிற்க வைத்து வருகிறார். பெரும்பாலும் அதில் யாரும் டெப்பாசிட் கூட … Read more

நாவடக்கம் வேண்டும்!.. நிதியை கொடுக்காத நீங்கள் பேசலமா?!. தர்மேந்திர பிரதானை எச்சரித்த ஸ்டாலின்!..

stalin

இப்போது மத்தியில் தொடந்து பாஜக மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பதால் மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் ஹிந்தியை கொண்டு வர முயற்சிக்கிறது. ஆனால், ஆளும் திமுக அரசு இதை கடுமையாக எதிர்க்கிறது. யார் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். ஆனால், எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்பதே தமிழக அரசின் கொள்கையாக இருக்கிறது. இதனால் கோபமடைந்த மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அனுமதித்தால் மட்டுமே கல்வி தொடர்பான நிதியை வழங்குவோம் … Read more

விஜய்க்கு ஒன்னும் தெரியாதுன்னு அட்வைஸ் பண்றதெல்லாம் செம காமெடி!.. பிரபலம் கோபம்!..

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். விக்கிரவாண்டியில் மாநாட்டையும் நடத்தி காட்டினார். மேலும், திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். எல்லோரும் சேர்ந்து திமுக அரசை அகற்றுவோம் என மகளிர் தின வாழ்த்து சொல்லும்போது கூட பேசியிருந்தார். அதேநேரம், விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை என திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அவர் பனையூர் அரசியல்வாதி, அங்கிருந்து மட்டுமே அரசியல் செய்து வருகிறார். காட்சி துவங்கி ஒரு … Read more