14 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! தமிழக உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

தமிழக உள்துறை செயலாளர் எஸ் கே பிரபாகர் வெளியிட்டிருக்கின்ற அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. கடந்த 2004ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளான ஏ.கே. செந்தில்வேலன், தினேஷ்குமார், ஆஸ்ரா கார்க், ஏ.சி. பாபு பி செந்தில்குமாரி, ஏ.டி. துரைகுமார், மகேஸ்வரி என் இசட் ஆசையம்மாள், இராதிகா, எஸ் .மல்லிகா, லலிதா லட்சுமி, விஜயகுமாரி, எம். பி விஜயகௌரி மற்றும் என்.காமினி உள்ளிட்ட 14 காவல்துறை அதிகாரிகள் ஐஜி பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. பதவி உயர்வு பட்டியலில் … Read more

பருவமழை பாதிப்பு! 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்தது குறிப்பாக சென்னையில் பெரும் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, மாநகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. பாதிப்புகளை மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது. அதோடு தமிழக அரசு சார்பாக மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் வழங்க கோரிக்கையும் விடுக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையின் பாதிப்புகளை சரி செய்வதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு … Read more

எல்லாம் தயார் நிலையில் உள்ளது! அமைச்சர் தெரிவித்து முக்கிய தகவல்!

வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டிருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது. இதனால் சென்னையில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும், சொல்லப் பட்டிருக்கிறது. அதேபோல அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், சுட்டிக் காட்டப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் … Read more

காலாண்டு, அரையாண்டு தேர்வா?- என்ன சொல்கிறார் கல்வியமைச்சர் ?

Image purpose only

கொரோனா பெருந்தொற்று காரணத்தினால் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமலேயே இருந்தன. வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனில் நடந்தன. இந்நிலையில் 9,10,11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதற்கு பல எதிர்ப்புகளும் வந்தன. பள்ளிகள் திறக்கப்பட்ட சிறிது நாட்களிலே பள்ளி மாணவர்களுக்கு கொரோனாத்தொற்று அதிகமாகவும் கண்டறியப்பட்டது. இப்படி பல சவால்களுக்கு இடையே 9,10,11,12 வகுப்புகள் நடைப்பெற்று கொண்டுதான் இருக்கின்றன. தற்பொழுது 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1 … Read more

விஜயதசமி அன்று திறக்கப்படுகிறதா தமிழக கோவில்கள் ?

Representative purpose only

உலகெங்கும் கொரோனா தொற்று நோய் காரணத்தால் மக்கள் வீடுகளில் முடங்கிப் போனார்கள். பிள்ளைகளுக்கு இணைய வழிக் கல்வி, அலுவலக பணிகள் அனைத்தும் வீட்டில் இருந்தே செய்வது போன்ற மாற்றத்தினால் கடந்த ஒன்றரை வருடமாக உலகம் நான்கு அறை சுவற்றினுள் முடங்கிப் போனது. ஊரடங்கு மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வங்களுக்கும் என்றாகி போனது. வரலாறு காணாத நிகழ்வாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா தொற்றின் மீதான விழிப்புணர்வும், தடுப்பூசியின் பயன்பாடும் அதிகரித்ததால் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் … Read more

தமிழகத்தில் இதற்கு அனுமதி வழங்கிய மாநில அரசு! உஷார் படுத்தப்படும் மாவட்ட ஆட்சியாளர்கள்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று காரணமாக கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இதன் காரணமாக, தமிழ்நாட்டில் திரையரங்கு, கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட பலவும் மூடப்பட்டிருக்கிறது. ஆனால் தற்சமயம் நோய்த்தர்த்தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல நோய்த்தொற்று காரணமாக, விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணத்தினால் தமிழகத்தில் கிராமசபை கூட்டங்களும் நடைபெறாமல் இருந்தன. இந்த நிலையில், எதிர்வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று பல கட்டுப்பாடுகளுடன் கிராமசபை கூட்டம் நடத்தலாம் என்று தமிழக அரசு … Read more

பொதுமக்களின் ஆர்வம்! மீண்டும் தடுப்பூசி முகாமை அறிவித்த தமிழக அரசு!

கடந்த 12ஆம் தேதி தமிழகத்தில் மாவட்டம் தோறும் ஊராட்சி வாரியாக மிகப்பெரிய தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது இதில் சுமார் இருபத்தி எட்டு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.அதோடு பல பகுதிகளில் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டதால் குறிப்பிட்ட நேரங்களுக்கு முன்பாகவே தடுப்பூசி முகாமை மருத்துவர்கள் முடித்துக் கொண்டு கிளம்பினார்கள். இதற்கிடையில் அன்றையதினம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தலைமைச் செயலாளர் இறையன்பு தற்சமயம் பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் ஆர்வத்தை பொறுத்து அடுத்தடுத்து வாரம்தோறும் இதேபோன்று … Read more

தமிழகத்தில் விதிமுறைகளுடன் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் இயங்கும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளும் வருகின்ற அக்டோபர் மாதம் 1ஆம் தேதியில் துவங்க இருப்பதாகவும் அந்த அனைத்து பள்ளிகளும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசிடமிருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டுமே விருப்பத்தின் பெயரில் பள்ளிகளுக்கு வரலாம் என்றும் 50 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. … Read more

தமிழக அரசின் புதிய திட்டம்! நடமாடும் ரேஷன் கடைகள்!

தற்போது தமிழக அரசு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் “அம்மா நகரும் ரேஷன் கடைகள்” எனும் புதிய திட்டம் செப்டம்பர் மாதம் 21  தேதி முதல்  நடைமுறை படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் ரேஷன் பொருள்களை தங்களின் வீட்டு அருகிலே பெற்றுக்கொள்ளலாம். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் இந்தத் திட்டத்தின் பயன்கள் குறித்து கூறியதாவது இத்திட்டத்தின் மூலம் நகரங்களில் வாழும் மக்கள் மட்டுமில்லாமல் கிராமத்தில் வாழும் மக்களுக்கும் இத்திட்டம் மிகவும் … Read more

புதிதாக கட்டப்பட்ட இரண்டு மேம்பாலங்கள் இன்று திறப்பு!

செங்கல்பட்டு மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில் ரூபாய் 55 கோடி செலவில் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பில் ஆறு வழி பாதைகள் கொண்ட உயர்நிலை மேம்பாலம் கட்டப்பட்டது. மேலும்  பல்லாவரத்தில் உள்ள ஜிஎஸ்டி ரோடு, சந்தை ரோடு, குன்றத்தூர் ரோடு  ஆகியவற்றை இணைத்து ரூபாய் 82 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது.  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் இந்த மேம்பாலங்கள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் என்பவரும் ரவிச்சந்திரன் என்பவரும் ஆய்வு … Read more