கொள்ளை போலி விளம்பரங்களில் கவனம் செலுத்திய ஆளும்கட்சி! உதயநிதி கடும் விமர்சனம்!

இந்தியா முழுவதும் வைரஸ் தொற்று கட்டுப்படுத்த இயலாமல் பரவி வருகின்றது. இதன் காரணமாக, பல மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.அதே சமயத்தில் தடுப்பூசி போடும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், தற்சமயம் தடுப்பூசியை பல மாநிலங்கள் வீணடித்து இருப்பது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த தடுப்பூசிகளை தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் வீணடித்து இருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. இதுவரையில் 12.10 சதவீத தடுப்பூசிகளை தமிழகத்தில் வீணடித்து … Read more

குஷ்புவுக்கு ஷாக் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

தேர்தல் நெருங்கி வருவதால் திமுக அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு போன்றவற்றை உறுதி செய்து இருக்கிறார்கள். அந்த விதத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகளும், பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகளும், ஒதுக்கப்பட்டு இருக்கின்றன இதில் பாட்டாளி மக்கள் கட்சி முன்னரே அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 23 … Read more

சிறகடிக்க துடிக்கும் கிளி! உதயநிதியை கலாய்த்த திமுக சீனியர்கள்!

நேற்றைய தினம் திருச்சி சிறுகனூர் அருகே எதிர்கட்சியான திமுக ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது இதில் திமுகவின் தொண்டர்கள் திரளாக பங்கேற்றார்கள். திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதிக்கு இந்த மாநாட்டில் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இது தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இருப்பதாக சொல்கிறார்கள்.திமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்று ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவருடைய மகனான உதயநிதி ஸ்டாலின் தான்தான் துணை முதலமைச்சர் என்பதை … Read more

முதல்வரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் திமுக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் பகுதிக்கு வருகை தந்த திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பகுதியில் இருக்கக்கூடிய 40 அடி உயரம் இருக்கின்ற கொடிக்கம்பத்தில் திமுகவின் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். அந்த சமயத்தில், உரையாற்றிய அவர் தமிழ்நாட்டிலேயே திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது அதேபோல சட்டசபைத் … Read more

பெண்களைப் பற்றிய உதயநிதியின் அந்த வார்த்தை! அதிகரிக்கிறது கண்டனம்!

பெண்களை இழிவுபடுத்தும் விதமாக உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன. எதிர்க்கட்சியான திமுகவின் இளைஞர் அணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் மோடிக்கு எடுபிடியாக ஆட்சி செய்து வருவதால் எடப்பாடி ஆட்சியை எடுபிடி ஆட்சி என தெரிவிக்கின்றோம். டெட்பாடி ஆட்சி என்று சொல்கிறார்கள். சசிகலாவின் காலில் விழுந்து தானே முதல்வரானார் நாற்காலி,மற்றும் மேஜைகளுக்கு இடையில் புகுந்து தானே விழுந்து கிடந்தார் என்று தெரிவித்ததோடு, மோசமான வார்த்தை ஒன்றையும் பிரயோகம் செய்து இருக்கிறார். அவரின் … Read more

கனிமொழி மற்றும் உதயநிதி இடையே நெருப்பாக புகைந்து வரும் மோதல்! விரக்தியில் திமுகவினர்!

விடியலை நோக்கிய ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார நிகழ்ச்சி திமுகவிற்கு மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. என்று தெரிவிக்கப்படுகின்றது. அதிகரித்துவரும் செலவுகளால் கட்சி நிர்வாகிகள் கலக்கத்தில் இருக்கிறார்கள். விளம்பர மோகம் காரணமாக, மேலிடத் தலைவர்கள் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி, திமுக சார்பாக விடிவை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் நடந்து வருகின்றது. திருச்சி சிவா, தயாநிதிமாறன், திண்டுக்கல் லியோனி, என்று பலர் இந்த நிகழ்ச்சியில் … Read more

உதயநிதி ஸ்டாலினின் வரம்புமீறி பேச்சு! கடிவாளம் போட்ட அதிமுக!

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக தரப்பில் டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டு இருக்கின்றது. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல், என்ற தலைப்பிலே திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சுற்றுப்பயணம் செய்து வருகின்றார். அந்த விதத்தில் சென்ற இரு தினங்களாக கடலூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு சில பகுதிகளில், பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் ஐ, சந்தித்து பேசி வருகிறார். அவர் பேசும்போது அதிமுக அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருப்பதோடு விரைவில் … Read more

அதிமுகவை எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்!

ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய நூலகமாக இருக்கிறது சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கின்ற அண்ணா நூற்றாண்டு நூலகம். அண்ணாவின் 102வது பிறந்த நேரத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் இந்த நூலகம் திறந்துவைக்கப்பட்டது. அந்த நூலகத்தில் அண்ணா என்கின்ற பெயர் பலகையில் அ”  என்ற எழுத்து தவறி விழுந்து விட்டது, அது சரிசெய்யப்படாமல் இருந்து வருகின்றது. இது குறித்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், அண்ணா திமுகவை திமுக ஆக்கிவிட்டார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தை ஆர்எஸ்எஸ் களமாக்கி இருக்கிறார்கள். இந்த சமயத்தில், கலைஞர் கொடுத்த … Read more

அவரெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது! எல். முருகன் பொளேர்!

உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை என்று தமிழக பாஜகவின் தலைவர் எல்.முருகன் தெரிவித்திருக்கின்றார். தமிழக பாஜக தலைவர் முருகன் தலைமையில் வேல் யாத்திரை கடந்த 6ஆம் தேதி திருத்தணியில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்காத நிலையில் தடையை மீறி யாத்திரை நடத்திய அந்த கட்சியினர் கைது செய்யப்பட்டனர் இதனை அடுத்து கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கின்ற நேரத்தில் திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பரப்புரையை கடந்த சில நாட்களுக்கு … Read more

உதயநிதியை எச்சரித்த உடன்பிறப்பு!

காவல்துறையினர் லாடம் கட்டி விடுவார்கள் உங்கள் அப்பாவிற்கு மிசாவில் நடந்தது ஞாபகம் இருக்கின்றதா என்று உதயநிதிஸ்டாலினை திமுக தொண்டர் ஒருவர் எச்சரித்து இருக்கின்றார். திருப்பூரை சேர்ந்த கலையரசன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்திருப்பது இப்போது வைரல் ஆகி வருகின்றது அதில் தம்பி உதயநிதி நீங்க ஒரு கூட்டத்தில் பேசிய மிரட்டல் பேச்சை கேட்டேன் நானும் உங்க கட்சிக்காரன் தான் பல வருடங்களாக அரசியலில் இருக்கும் அனுபவத்தில் கூறுகின்றேன் காவல்துறையிடம் ஒட்டவும் கூடாது … Read more