ஆடைகளை கிழித்து! காதலனை நம்பிச் சென்ற பெண்ணுக்கு அவரின் குடும்பத்தாரால் ஏற்பட்ட கொடூரம்!!

0
38
Tear off the clothes! A girl who trusted her boyfriend was brutalized by her family!!
Tear off the clothes! A girl who trusted her boyfriend was brutalized by her family!!

ஆடைகளை கிழித்து! காதலனை நம்பிச் சென்ற பெண்ணுக்கு அவரின் குடும்பத்தாரால் ஏற்பட்ட கொடூரம்!!

காதலனே இளம்பெண்  ஒருவரை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அடித்து ஆடைகளை கிழித்து மரத்தில் கட்டி வைத்த அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த கொடூர சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிதி மாவட்டத்தில் இளம் பெண் ஒருவரை ஒரு ஆண் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து அடித்து ஆடைகளை கிழித்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர். புதன் கிழமை இரவு 11 மணி அளவில் சாரியா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்ததும் அந்த பெண்ணை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையில் அந்தப் பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், பின்னர்  அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் அந்த பெண்ணுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் எனக் கூறி காதலனின் தந்தை மற்றும் தந்தையின் இரண்டு மனைவிகளும் திட்டம் போட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் படி அந்த பெண்ணை புதன்கிழமை இரவு வீட்டிற்கு வருமாறு காதலன் அழைத்துள்ளார்.

அந்தப் பெண் வந்ததும் நான்கு பேரும் அவரை அருகில் உள்ள காட்டிற்கு இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு  அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி ஆடைகளை கிழித்து எறிந்துள்ளனர்.  அவர் இறந்து விடுவார் என நினைத்து அவருடைய உடைகளையே கொண்டு அவரை மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

மீட்கப்பட்டதுக்கு பின்னர் அந்தப் பெண் போலீசாரிடம் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த விவரங்கள் தெரியவந்ததை அடுத்து நான்கு பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.