தஞ்சாவூர் பள்ளி மாணவி திடீர் மாயம்! கோவை ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சிறுமி!

0
137
Thanjavur school girl suddenly magic! The girl was rescued at the Coimbatore railway station!
Thanjavur school girl suddenly magic! The girl was rescued at the Coimbatore railway station!

தஞ்சாவூர் பள்ளி மாணவி திடீர் மாயம்! கோவை ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சிறுமி!

கோவை மாவட்ட மாநகர போலீசருக்கு தஞ்சாவூர் போலீசாரிடம்மிருந்து  தகவல் ஒன்று   வந்தது.அந்த தகவலில் தஞ்சாவூரை சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று அங்கிருந்து காணாமல் போனதாக கூறி தஞ்சாவூர் காவல்துறையிடம் புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர் அப்போது அந்த சிறுமையை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சிறுமி அவரது வீட்டில் இருந்தால் செல்போனை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் என்பதும் தெரிய வந்தது. உடனடியாக போலீசா அந்த சிறுமி வைத்திருக்கும் செல்போன் எண்ணின்  நெட்வொர்க் எங்கு உள்ளது என சோதனை செய்ததில் கோவை ரயிலில் வந்து கொண்டிருப்பதாக அந்த தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அந்த தகவலின் அடிப்படையில் கோவை மாநகர போலீசார் கோவை ரயில் நிலையத்திற்கு  விரைந்து சென்றனர். அப்போது இன்று அதிகாலை அந்த சிறுமியை கண்டுபிடித்தனர். அதனையடுத்து சிறுமியை கோவை மாநகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறுமி மீட்கப்பட்டது குறித்து தஞ்சாவூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தஞ்சாவூர் போலீசார் சிறுமி மீட்க விரைந்து வந்தனர். தஞ்சாவூர் போலீசார் கோவை வந்தடைந்ததும் அந்த சிறுமை அவர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்படுவார் என்னும் கோவை கோபாலபுரம் பகுதியில் மாவட்ட காவல் துறையினர் கூறினார்கள்.

author avatar
Parthipan K