கேரள மாநிலம் கோட்டயம் அருகே சூதாடியவர்களை பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளர்!! இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!!

0
169
#image_title

கேரள மாநிலம் கோட்டயம் அருகே சூதாடியவர்களை பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளர்!! இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!!

கேரள மாநிலம் கோட்டயம் அருகே ராமபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் குறவிலங்காடு பகுதியைச் சேர்ந்த ஜோபி ஜார்ஜ். இவர் ராமபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தனியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.

அதை ஒட்டி சக காவலரான வினித் என்பவரை அழைத்துக் கொண்டு ஜோபி ஜார்ஜ் சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் சோதனைக்காக சென்றார். அப்போது அந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் மூடப்பட்ட அறைக்குள் வெளிமாநில தொழிலாளர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

அவர் கதவை தட்டியும் அந்த தொழிலாளர்கள் கதவை திறக்காததால் தன் பலத்தை பயன்படுத்தி கதவை உடைக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டாவது மாடியில் இருந்து ஜோபி ஜார்ஜ் கால் தவறி கீழே விழுந்தார். இதனால் உடலின் பல பாகங்களிலும் படுகாயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபகரமாக உயிரிழந்தார். இவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். பணிக்கு இடையே இரண்டாவது மாடியில் இருந்து உதவி ஆய்வாளர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.