தங்கையை சீரழித்த அண்ணன்! என்ன ஒரு அயோக்கியத்தனம்?

Photo of author

By Hasini

தங்கையை சீரழித்த அண்ணன்! என்ன ஒரு அயோக்கியத்தனம்?

Hasini

The brother who ruined his sister! What an absurdity?

தங்கையை சீரழித்த அண்ணன்! என்ன ஒரு அயோக்கியத்தனம்?

தற்போதுள்ள சூழ்நிலையில் யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்பது பெரிய கேள்விக்குறியாகவே தொடர்ந்து வருகிறது.  பெண் பிள்ளைகள் இருந்தாலே கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரிகிறது. அது அண்ணன் என்றாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி.

திருச்சி மாவட்டம் துறையூர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி அம்மாபேட்டையிலும், 2-வது மனைவி தனது 3 மகள்களுடன் நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியிலும் வசித்து வருகின்றனர்.

இதில் 14 வயதான 3-வது மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தினார்.

முதற்கட்ட விசாரணையில் கூலித்தொழிலாளியின் முதல் மனைவியின் மகன் சுரேஷ் (வயது 31) என்பவர் மோகனூர் பகுதியில் உள்ள தனது சித்தி குடும்பத்தினருடன் தங்கி மேஸ்திரி வேலை செய்து வந்தார்.

அப்போது சித்தியின் 3-வது மகள் தங்கையான 14 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதையடுத்து கர்ப்பம் அடைந்த சிறுமியிடம் நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்வதாக மிரட்டியதும் தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதல் மனைவியின் மகன் சுரேசை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.