பேருந்து நிறுத்தத்தின் மீது மோதிய கார்!! 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!! 

0
53
the-car-crashed-into-the-bus-stop-4-people-tragically-lost-their-lives
the-car-crashed-into-the-bus-stop-4-people-tragically-lost-their-lives

பேருந்து நிறுத்தத்தின் மீது மோதிய கார்!! 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!! 

பேருந்து நிறுத்தத்தின் மீது கார் மோதியதில் அதில் வந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் வாடகை காரில்  மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  அந்த காரில் நான்கு பேர் இருந்தனர். அந்த காரானது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லஞ்சமேடு பகுதியில் அரசமர பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது காரானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் மோதி பின்னர் பேருந்து நிறுத்தத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

இந்த விபத்தில் காரானது முற்றிலும் சேதமடைந்ததால் காரில் இருந்த நால்வரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் உள்ளவருக்கு சுயநினைவு எதுவும் இல்லாததால் விபத்தில் காயம் அடைந்தவர்களின் விவரம் எதுவும் தெரியவில்லை.

விபத்து நடந்து இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து நிறுத்தத்தில் கார் மோதி 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.