தாயை கொன்ற மகள்! சொத்துகளின் மேல் உள்ள மோகத்தால் ஏற்பட்ட வினை!

0
98
The daughter who killed her mother! Will they even do this?
The daughter who killed her mother! Will they even do this?

தாயை கொன்ற மகள்! சொத்துகளின் மேல் உள்ள மோகத்தால் ஏற்பட்ட வினை!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே குன்னம்குளம் கீழ் ஊரை சேர்ந்தவர்  சாந்தன். அவருடைய மனைவி ருக்மணி (வயது 57). இந்த சம்பவத்தில் இந்துலேகா(வயது 40)  என்ற மகள் உள்ளார்.மேலும் சாந்தன் உடல்நிலை குறைபாடு காரணமாக  2019 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

அதை தொடர்ந்து தாய்க்கு  உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறி தன் மகள் நேற்று குன்னம்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.மேலும் ருக்மணி உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பிரேத  பரிசோதனையில் விஷம் குடித்ததால் மரணம் நிகழ்ந்தது தெரியவந்தது.

மகளை போலீஸார் விசாரித்ததில், விஷம் கொடுத்து கொன்றது தெரியவந்தது. சொத்து தொடர்பாக ருக்மணிக்கும், இந்துலேகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து, தாயை கொலை செய்ததாக கைதான மகள் வாக்குமூலம் அளித்தார்.இது பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து  அப்பகுதி மக்களளுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
CineDesk