வீடு கட்டுமான பணியின் போது ஏற்பட்ட பயங்கரம் !! ஒரு பெண் பலி இருவர் கவலைக்கிடம்!! 

0
73
The horror that happened during the construction of the house!! A woman died and two are worried!!
The horror that happened during the construction of the house!! A woman died and two are worried!!

வீடு கட்டுமான பணியின் போது ஏற்பட்ட பயங்கரம் !! ஒரு பெண் பலி இருவர் கவலைக்கிடம்!! 

மதுரை விளாங்குடியில் கட்டிடம் கட்டுமான பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் பெண் மரணமடைந்தார்.

மதுரை மாவட்டம் விளாங்குடியில் வீடு  ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கட்டிட வேலைகள் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் அந்த வீட்டின் படிக்கட்டு அடியில் நான்கு தொழிலாளர்கள் அமர்ந்து பணியை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பணியில் கவனமாக இருந்ததில் அடுத்து நிகழ இருக்கும் விபரீதம் புரியாமல் தங்கள் வேலையை செய்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த கட்டிடத்தின் படிக்கட்டுகள் சீட்டுக் கட்டு போல மளமளவென இடிந்து விழுந்தன. இதில் படிக்கட்டின் அடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நால்வரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கியவர்களில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மூவரில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக் கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று பலியான பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் என்ன?? கட்டிடம் முறையாக கட்டப்பட்டு வருகிறதா ?? அதற்கான ஒப்பந்தகாரர் யார் என்பன போன்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அதன் பின்னரே இந்த விபத்துக்கான காரணம் தெரிய வரும்.