லிப்லாக் கொடுத்த கணவன்!! அடுத்து கதற கதற மனைவி செய்த அதிர்ச்சி செயல்!! 

0
37
The husband who gave liplock!! The shocking act of the screaming wife!!
The husband who gave liplock!! The shocking act of the screaming wife!!

லிப்லாக் கொடுத்த கணவன்!! அடுத்து கதற கதற மனைவி செய்த அதிர்ச்சி செயல்!! 

வலுகாட்டயமாக  உதட்டில் முத்தம் கொடுத்த  கணவனின் நாக்கினை மனைவி கடித்து துண்டாக்கியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில்  குண்டூர் மாவட்டம் எல்லம்ம குட்டாதாண்டா கிராமத்தை சேர்ந்தவர் தாராசந்த் நாயக். இவரது மனைவி புஷ்பாவதி. இவர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக இருவருக்கும் தகராறு நீடித்து வந்தது. இவர்களின் சண்டை அந்த கிராமத்தினர் அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தது. இதையடுத்து வழக்கம் [போல இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக சிறிது நேரம் கழித்து தனது மனைவியை தாராசந்த் நாயக் சமாதனம் செய்ய முடிவு செய்து அவரிடம் அமைதியான முறையில் பேச முயற்சி செய்தார். அப்போது மௌனமாக இருந்த மனைவியின் அருகில் சென்று உதட்டோடு வலுகட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்று உள்ளார். இதனால் தனது கணவனின் நாக்கினை புஷ்பாவதி கடித்துள்ளார்.

இதனால் வலி தாங்காமல் தாராசந்த் அலறியுள்ளார். அப்போதும் விடாமல் நாக்கினை கடித்த புஷ்பாவதி கணவனின் நாக்கு துண்டாகி தொங்கும் வரை கடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் காயமடைந்த தாராச்சந்தை மீட்டு சிகிச்சைக்காக குத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தாரச்சந்தை பரிசோதித்த  மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அனந்தபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தனது விருப்பமில்லாமல் தாக்கி முத்தமிட முயன்ற கணவனின் நாக்கை கடித்ததாக புஷ்பாவதி போலீசில் புகார் அளித்தார்.

மேலும் தாராசந்த் அளித்த புகாரில் தனது மனைவி வேண்டும் என்றே எனது நாக்கினை கடித்தார். எண்ணெய் கொன்று விடுவாரோ என பயமாக உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை அளித்த நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.