தலைவாசல் அருகே பாரதியார் மகளிர்  கல்லூரியில் நடந்த சம்பவம்! அச்சத்தில் மாணவிகள்! 

0
224
The incident happened in a private college near Talivasal! Students in fear!
The incident happened in a private college near Talivasal! Students in fear!

தலைவாசல் அருகே பாரதியார் மகளிர்  கல்லூரியில் நடந்த சம்பவம்! அச்சத்தில் மாணவிகள்!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாங்குறிச்சி எனும் பகுதியில் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதில்  பாரதியார் மகளிர் கல்லூரி சிறந்த இடத்தை பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே மாணவர்கள் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

விடுதியின் முதல் தளத்தில் முதலாமாண்டு மாணவி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை கண்ட அந்த அறையைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் மயக்கம் அடைந்தனர். அங்குள்ள சக மாணவிகள் மற்றும் விடுதி பணியாளர் என அனைவரும் இந்த மூன்று மாணவிகளையும் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சற்று நேரத்தில் அதே கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் இரண்டாவது தளத்தில் இன்ஜினியரிங் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி கோபிகா (18) தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக அந்த தளத்தில் உள்ள சக மாணவிகள் விடுதி பணியாளரிடம் தெரிவித்தனர்.

உடனடியாக அந்த மாணவியை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அப்போது அந்த மாணவியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் இந்த மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர். முதலாம் ஆண்டு மாணவி தற்கொலை மற்றும் மூன்று மாணவிகள் திடீர் மயக்கம் அந்த கல்லூரியில் படிக்கும் சக மாணவிகளுக்குயிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தலைவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் ஆத்தூர்  அரசு மருத்துவமனைக்கு வந்த போலீசார் மாணவி இறப்பு குறித்தும் மூன்று மாணவிகள் மயக்கமடைந்ததை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலை குறித்து ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
Parthipan K