வயிற்று வலியால் துடித்த சிறுமி!! 5 மாத கர்ப்பம் பெற்றோர்கள் அதிர்ச்சி!!

0
138
The little girl was suffering from stomach pain!! 5 months pregnant parents shocked!!
The little girl was suffering from stomach pain!! 5 months pregnant parents shocked!!

வயிற்று வலியால் துடித்த சிறுமி!! 5 மாத கர்ப்பம் பெற்றோர்கள் அதிர்ச்சி!!

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வயிற்று வலியால் அவதி பட்டுள்ளார். உடனே சிறுமியின்  பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

 இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதை பற்றி சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது 6 மாதத்திற்கு முன்னால் வீட்டில் யாரும் இல்லாதபோது, அதே பகுதியை சேர்ந்த ஜீவரத்தினம் என்கிற வாலிபர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை ஜீவரத்தினத்தின் நண்பர்கள் புகைப்படம் எடுத்து வைத்து கொண்டுள்ளனர் எனவும் சிறுமி தெரிவித்தார்.

உடனே சிறுமியின் பெற்றோர், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை கட்டாயப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்த  ஜீவரத்தினத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஜீவரத்தினத்தின் நண்பர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

author avatar
CineDesk