முதலாளியாக இருந்தவர் தொழிலாளியாக மாறியதால் தற்கொலை ! இதற்கு காரணம் என்ன?

Photo of author

By CineDesk

முதலாளியாக இருந்தவர் தொழிலாளியாக மாறியதால் தற்கொலை ! இதற்கு காரணம் என்ன?

CineDesk

The man who was an employer committed suicide because he became a worker! What is the reason for this?

முதலாளியாக இருந்தவர் தொழிலாளியாக மாறியதால் தற்கொலை ! இதற்கு காரணம் என்ன?

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காடு இலைக்கடை சந்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவருடைய மனைவி பிரேமா (வயது 30). இந்த தம்பதிகளுக்கு  ஹாசினி (வயது 9) மற்றும் ஜோவியா (வயது 5) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக வெள்ளி கம்பி மிஷின் வைத்து நடத்தி வந்துள்ளார்.

மேலும் மணிகண்டன் குடிப்பழக்கத்திற்கு  அடிமையானவர். இதனிடையே மது குடிக்கும் பழக்கத்தால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது, இதைதொடர்ந்து  தனது கம்பி எந்திர பட்டறையை மூடி விட்டார்.அவர் மேலும் வேறொரு பட்டறைக்கு  சென்று வேலை  செய்து வந்துள்ளார்.

முதலாளியாக இருந்த மணிகண்டன் தொழிலாளியாக மாறியுள்ளார்.இதனால்  கடந்த சில நாட்களாக மனம் சோர்ந்து இருந்தார். இந்த நிலையில் மாடி வீட்டில் யாரும் இல்லாத போது அங்கு சென்று மின்விசிறியில் சேலையால்   தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கௌரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.