எட்டுமாத கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரமாக தாக்கி கொலை செய்த காவல் அதிகாரி!..தீ வைத்த ஊர் மக்கள்?

0
194
The police officer who brutally attacked and killed the eight-month pregnant woman!
The police officer who brutally attacked and killed the eight-month pregnant woman!

எட்டுமாத கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரமாக தாக்கி கொலை செய்த காவல் அதிகாரி!..தீ வைத்த ஊர் மக்கள்?

ஜம்மு காஸ்மீரில் கதுவா மாவட்டத்தில் சிறப்புக் காவலர் அதிகாரி ஒருவர் பில்லவார் பகுதியில் வசித்து வந்துள்ளார்.அவருடைய மனைவி கர்ப்பமாக உள்ளார்.இந்நிலையில் தனது மனைவி என்றும் பாராமல் அவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.இதனால் கோபமடைந்த கிராமவாசிகள் சிலர்நேற்று அவரது வீட்டிற்கு தீ வைத்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொலை செய்த குற்றவாளியை தனிப்படை போலீஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள் என மூத்த காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் சந்தர் கோட்வால் தெரிவித்துள்ளார்.மேலும் கொலைக்கான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.கதுவா மாவட்டக் காவல் கோட்டத்தில் மோகன் லால் பணியமர்த்தப்பட்டுள்ளார்.இவரது மனைவி ஆஷாதேவி.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.சென்ற மூன்று நாட்களாக தொடர் விடுமுறை என்பதால் மோகன் லால் வீட்டிலே இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் மனைவி கணவன் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது வாய் வாக்குவாதத்தால் கோபமடைந்த மோகன் லால் தனது மனைவி என்றும் பாராமல் கொடூரமாக தாக்கியுள்ளார்.

நிலைகுலைந்த மனைவியோ ரத்த வெள்ளத்தில் சரித்து கீழே விழுந்துள்ளார்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கணவன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருவதற்குள் அவ்விடத்தை விட்டு தப்பி ஓடி விட்டார்.தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள் அங்குள்ள கிராமவாசிகள் அவரின் வீட்டை தீ வைத்து எரித்தனர்.

ஆஷாதேவி எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் இந்த கொலையால் அவரது வயற்றில் இருந்த குழந்தை இறந்து விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

author avatar
Parthipan K