ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென்று கோபம் அடைந்த சூப்பர் ஸ்டார்! காரணமான ஏவிஎம் சரவணன்?

0
124
#image_title

ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென்று கோபம் அடைந்த சூப்பர் ஸ்டார்! காரணமான ஏவிஎம் சரவணன்?

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி திரையங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சிவாஜி திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மிகவும் கோபம் அடைந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் எப்பவுமே அதிகமாக கோபம் அடைய மாட்டார் என்பது அவருடைய ரசிகர்களுக்கும் சரி நமக்கும் சரி தெரிந்த விஷயம் தான். ஆனால் சிவாஜி திரைப்படம் ஷூட்டிங் செய்யப்படும் பொழுது அந்த சமயத்தில் ரொம்ப கோபப்பட்டுள்ளாராம். அதற்கும் ஏவிஎம் சரவணன் அவர்கள் தான் காரணம் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன், சுமன், ரகுவரன் மற்றும் பலர் நடிப்பில் உருவான சிவாஜி திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் சார்பாக ஏவிஎம் சரவணன் அவர்கள் தயாரித்திருந்தார். ஏவிஎம் நிறுவனம் திரைப்படங்களை தயாரிக்கத் தெடங்கியதில் இருந்தே பல திரைப்படங்களில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பின் கீழ் நடித்துள்ளார். இதனால் ஏவிஎம் நிறுவனத்திற்கும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கும் நல்ல பழக்கம் இருக்கின்றது.

இதையடுத்து சிவாஜி திரைப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் திடீரென்று ஒரு கேரவன் வந்துள்ளது. இதையடுத்து இதை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கடும் கோபம் அடைந்து யாருக்கு அந்த கேரவன் என்று கேட்டுள்ளார். உடனே ஏவிஎம் சரவணன் அவர்கள் வந்து உங்களுக்காகத் தான் கேரவன் வரவழைத்தேன் என்று கூற ரஜினிகாந்த் மேலும் கோபம் அடைந்துள்ளார்.

இதையடுத்து ஏவிஎம் சரவணன் அவர்களிடம் நான் 30 வருடங்களுக்கும் மேலாக ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் திரைப்படங்கள் நடித்து வருகிறேன். எனக்கு எதற்கு கேரவன் எல்லாம். எனக்கு ஏவிஎம் நிறுவனத்தின் ஸ்டுடியோவில் அறை ஒன்று உள்ளது. நான் அங்கேயே தங்கிக் கொள்வேன். கேரவன் எல்லாம் வேண்டாம்” என்று கூறினாராம். இந்த தகவலை ஏவிஎம் சரவணன் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏவிஎம் சரவணன் அவர்கள் கூறியுள்ளார்.