சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி குறித்து அந்த அணி வீரர் கூறியுள்ள ருசிகர  கருத்து! 

0
176
#image_title
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி குறித்து அந்த அணி வீரர் கூறியுள்ள ருசிகர  கருத்து! 
ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் மிகவும் முக்கியமான அணியாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் அணியாகவும் உள்ள ஒரே அணிதான் தல என்றழைக்கப்படும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் போட்டியில் சென்னை அணி விளையாடுகிறது என்றால் அது மிகப்பெரிய எதிர்பார்ப்பை அனைவரிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்.
ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்புக்கு மிக முக்கிய காரணமே கேப்டன் தோனி தான் என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் ஒரே அணிக்கு கடந்த 16 வருடமாக கேப்டன் பொறுப்பை ஏற்பதென்பது சாதாரண காரியம் அல்ல, அந்த வகையில் சென்னை அணியின் வீரரான மொயின் அலி தோனி பற்றி நேற்று கூறுகையில்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடியது தனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை என்றும், பயிற்சியின்போது தோனி விளையாடுவதை பார்த்து வருகிறேன். அவர் நம்பமுடியாத அளவில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த வயதில் தோனி இப்படி விளையாடுவது அற்புதமான ஒன்று.
தோனியின் விளையாட்டு திறமையை வைத்து பார்க்கும் போது அவர் விரைவில் ஒய்வு பெறுவதாக கூறப்படுவது பொய் என தோன்றுகிறது. அவர் திறமைக்கு இன்னும் 3 அல்லது 4 வருடங்களுக்கு விளையாடுவார் என்றே தோன்றுகிறது.
சென்னை அணியை பொறுத்தவரை எப்போதும் முடிவை பற்றி சிந்திப்பது கிடையாது, ஆட்டத்தின் போது அப்போதுள்ள தருணத்தில் என்ன செய்ய வேண்டுமோ! அதை மட்டுமே செய்து வருகிறோம். அதுதான் ஆட்டத்தின் முடிவை சரியாக எடுத்து செல்வதாகவும்,  இதுதான் தோனியின் தலைமையில் நாங்கள் புரிந்து கொண்ட விஷயம் என மொயின் அலி தெரிவித்தார்.