பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி செய்த காரியம்! ஈரோட்டில் அரங்கேறிய சம்பவம்!

0
81
Schoolgirl who committed suicide! Is this the reason?
Schoolgirl who committed suicide! Is this the reason?

பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி செய்த காரியம்! ஈரோட்டில் அரங்கேறிய சம்பவம்!

ஈரோடு டிஎன் பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் அவரது மனைவி மலர். இவர்களுக்கு 2 குழந்தைகள் மகன் அபிமன்யு (வயது 14) கலைவாணி (வயது 15). சுரேஷ் மற்றும் அவருடைய மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்த நிலையில் வாழ்ந்து வந்தனர். இதனால் குழந்தைகள் இருவரும் கோபி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அபிமன்யு பதினொன்றாம் வகுப்பு கலைவாணி பத்தாம் வகுப்பும் படித்து வந்தனர்.

இதையடுத்து நேற்று இவர்களின்  மகள் கலைவாணி தன்னுடைய துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பங்களாபுதூர் போலீசார்   வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கலைவாணி சில  தினங்களாக வயிறு வழியில் அவதிப்பட்டு வந்ததாகவும் அதனை  குடும்பத்தினர் யாரும் கண்டுகொள்ளாத  நிலையில் வீட்டில் யாரும் இல்லாத பொழுது வயிற்று வலி தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் எனும் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் இரண்டாவது கட்ட விசாரணை நடத்தி வருகிறார்கள்.

author avatar
Parthipan K