கணவர் மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த மனைவி!! போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்!!

0
138
The wife complained to the police station that her husband had disappeared!! Shocking facts revealed in the investigation of the police hoard!!
The wife complained to the police station that her husband had disappeared!! Shocking facts revealed in the investigation of the police hoard!!

கணவர் மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த மனைவி!! போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்!! 

தொழிலாளி மாயமானதாக கருதப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. அவரின்  மனைவி மற்றும் கள்ளக்காதலன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

பெலகாவியில் தொழிலாளி மாயமானதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென இந்த வழக்கின்  திடீர் திருப்பமாக மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று உடலை மலைப்பகுதியில் புதைத்துள்ளார். தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெலகாவி டவுன் அருகே உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சந்தியா. ரமேஷ் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் கடந்த மார்ச் மாதம் ரமேஷை காணவில்லை. அவர் மாயமானதாக அவரது மனைவி சந்தியா டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் சந்தியாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது.  இதனால் அவர்கள் சந்தியாவை அழைத்து தீவிர விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

ரமேஷின் நண்பர் பாலு. இவர் ரமேஷை சந்திக்க வரும்பொழுது சந்தியாவுடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனியே சந்தித்து தனிமையில் சந்தோஷமாக இருந்துள்ளனர். இந்த விவரம் ரமேஷின் காதிற்கு தெரிய வரவே அவர் சந்தியாவை கூப்பிட்டு எச்சரித்துள்ளார். எனினும் கணவர் பேச்சை சந்தியா கேட்காமல் பாலுடன் தொடர்பை தொடர்ந்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

அடிக்கடி ரமேஷ் கண்டிக்கவே சந்தியா தனது கணவரை கொல்ல திட்டம் தீட்டினார். இதற்கு அவர்  தனது கள்ளக்காதலன் பாலுவுடன் சேர்ந்து ரமேஷுக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். அவர் மயங்கியதும் கழுத்தை நெரித்து  கொலை செய்துள்ளனர். மேலும் தன் மேல் சந்தேகம் வராமல் இருப்பதற்காக ரமேஷ் உடலை கோவா மாநில எல்லையில் ஒரு மலைப்பகுதியில் புதைத்துள்ளனர். மேலும் போலீஸிடம் இருந்து தப்பித்துக் கொள்ள கணவரை காணவில்லை என நாடக மாடி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த விவரங்கள் போலீசின் தீவிர விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சந்தியா அவரது கள்ளக்காதலன்  உள்ளிட்ட  4 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதோடு ரமேஷின் உடலை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த  சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.