விவசாயம் செய்து வந்த பெண் திடீர் மரணம்! அப்பகுதியில் பரபரப்பு!

0
105
The woman who was farming died suddenly! Excitement in the area!
The woman who was farming died suddenly! Excitement in the area!

விவசாயம் செய்து வந்த பெண் திடீர் மரணம்! அப்பகுதியில் பரபரப்பு!

டி என் பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கவுண்டபளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்(47) இவருடைய மனைவி தனலட்சுமி(42) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் குடுபத்துடன் அவர்களின் 1ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். அது மட்டுமல்லாமல் வேறு ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர்.

இந்நிலையில் விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளனர். மேலும் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.அதனால்  கடந்த சில நாட்களாக தனலட்சுமி மனமுடைந்த காணப்பட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று மதியம் தனலட்சுமி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளித்த வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்த போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

author avatar
Parthipan K