இன்றுமுதல் நெல்லையிலும் வெளியிடப்படும் தீக்கதிர் நாளிதழ்!!

0
132
#image_title

இன்றுமுதல் நெல்லையிலும் வெளியிடப்படும் தீக்கதிர் நாளிதழ்!!

முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய மார்க்சிஸ்ட் கம்ய னிஸ்ட் கட்சியை உருவாக்கிய மகத்தான தலைவர்களில் ஒருவர் தோழர் என்.சங்கரய்யா. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக தீக்கதிர் வெளிவரத் துவங்கிய போது, முதல் ஆசிரியராகவும் பணியாற்றிய தோழரும் என்.சங்கரய்யா தான்.

download 8

சென்னை, கோவை, திருச்சி மதுரை என தமிழகத்தில் நான்கு பகுதிகளில் இருந்து தீக்கதிர் நாளிதழின் அலுவலகமும், பதிப்பகமும் செயல்பட்டு வருகிறது.  தீக்கதிர் நாளிதழ் அடுத்த கட்டமாக, தீக்கதிர்- நெல்லை பதிப்பு நாளிதழ் இன்றுமுதல் நெல்லையில் தொடக்கப்படுகிறது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிரகாஷ் காரத் தொடங்கி வைக்கிறார்.

ஏன் நெல்லையில் தொடங்க வேண்டும்?

 நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியப் பங்கினை வகித்த பகுதிகளாகும். தொழிலாளி வர்க்க இயக்கத்திலும், விவசாயிகள் இயக்கத்திலும், புரட்சிகர இயக்கத்தை வளர்ப்பதிலும் இந்த மாவட்டங்கள் முக்கியமான பங்கு வகித்து வந்துள்ளன. இப்போது, இந்த மாவட்டங்களை உள்ளடக்கிய தீக்கதிர் நெல்லைப் பதிப்பு  வெளியிடப்படுவது, அந்த வட்டாரங்களில் மக்கள் இயக்கத்தையும், தொழிலாளர்-விவசாயிகள் இயக்கத்தையும் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் வளர்க்கப் பெரிதும் பயன்படும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

நோக்கம் :-

தொழிலாளர் இயக்கத்தை தமிழ்நாட்டில் வளர்த்தெடுப்பதில் பெரும்  பங்கு வகித்த தீக்கதிர் நாளேட்டை விரிவுபடுத்த வேண்டியது அவசியமான ஒன்று.  பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இந்த ஏட்டை கொண்டு செல்ல வேண்டும், மன்றங்களிலும், படிப்பகங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் தீக்கதிரை வாசிக்கச் செய்வது, கட்சிப் பத்திரிகை என்பது கட்சியின் அமைப்பாளர் என்று மாமேதை லெனின் கூறியதற்கேற்ப, தீக்கதிர் என்பது ஒரு பெரும் ஆயுதம் என்பதை மனதில் கொண்டு பிற்போக்கு சக்திகளுக்கு எதிராகவும், வகுப்பு வாத சக்திகளுக்கு எதிராகவும் பிளவுவாத சக்திகளுக்கு எதிராகவும் இந்தியாவில் இடதுசாரி ஜனநாயக சக்திகள் வலிமை பெறவும் போராட வேண்டுமென என கட்சித் தலைமையிடம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் தீக்கதிர் நாளிதழை  நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மக்களிடம் பரவலாக கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

author avatar
Parthipan K