1 வாரத்தில் மரு தானாக கொட்ட இந்த 2 பொருள் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
120
These 2 ingredients are enough to get rid of warts automatically in 1 week!! Try it immediately!!
These 2 ingredients are enough to get rid of warts automatically in 1 week!! Try it immediately!!

1 வாரத்தில் மரு தானாக கொட்ட இந்த 2 பொருள் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

மருவானது உடலில் இருப்பதால் பலருக்கும் உடல் ரீதியாகவோ அல்லது அழகு ரீதியாகவோ பல பிரச்சனைகள் சந்திப்பது வழக்கம். அது மட்டுமின்றி இந்த மருவானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்லும்.

சில வைரஸ் தொற்று காரணமாக சிலருக்கு மரு வருகிறது.இந்த மருவை தொட்டுவிட்டு வேறொரு இடத்தை தொட்டாலும் மரு வர அதிக வாய்ப்புகள் உண்டு.அதுமட்டுமின்றி ஓர் சிலருக்கு சருமத்தில் நோய் எதிர்ப்பு சக்தியானது குறைந்து கொண்டே போகும் அதனாலும் மரு வரலாம்.

எனவே சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அதற்குண்டான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்.

தற்பொழுது இதனை அகற்ற லேசர் சிகிச்சை முறை போன்றவை வந்தாலும் அதற்கெல்லாம் ஆயிரக்கணக்கில் செலவழிக்க நேரிடுகிறது. ஆனால் இதனை தடுக்க அக்கால பாட்டி வைத்தியம் நமக்கு எளிமையான முறையில் கைகொடுக்கும். அந்த வகையில் ஒரே வாரத்தில் எப்பேர்பட்ட பெரிய மருவையும் நீக்க வைத்து விடலாம்.

தேவையான பொருட்கள்:

வெற்றிலை

சுண்ணாம்பு

செய்முறை:

வெற்றிலையின் காம்பை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு கரைத்து வைத்துள்ள சுண்ணாம்பை அதன் காம்பில் தொட்டு மரு உள்ள இடத்தில் தடவி விட வேண்டும்.

இவ்வாறு தடவும் பொழுது நாளடைவில் மருவானது தானாக கொட்டி விடும்.

குறிப்பாக வெற்றிலை காம்பை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்,இதில் அதிக அளவு ஆண்டி பாக்டீரியா உள்ளதால் இது மரு போன்ற கொப்பலங்களை நீக்க உதவும்.

இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர நல்ல மாற்றத்தை காணலாம்.