நீங்கள் தினந்தோறும் செய்து கொண்டிருக்கும் தவறுகள் இவை!! இனி இப்படி செய்யாதீர்கள்!!

0
54
#image_title

நீங்கள் தினந்தோறும் செய்து கொண்டிருக்கும் தவறுகள் இவை!! இனி இப்படி செய்யாதீர்கள்!!

*வீட்டில் காலையில் கோலம் போடாமல், பூஜை அறையில் உள்ள கடவுள் படங்களுக்கு விளக்கு ஏற்றமானால் கோயிலுக்கு செல்லக் கூடாது.

*செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டை துடைக்க கூடாது.

*வீடு பெருக்கும் துடைப்பத்தை நின்றவாறு வைக்கக் கூடாது.

*பழைய துடைப்பத்தை செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தூக்கி போடக் கூடாது.

*வீட்டில் அரிசி, பருப்பு, கல் உப்பு நிறைந்து இருக்க வேண்டும்.

*எரியும் விளக்கில் உள்ள எண்ணெய், நெய்யைத் தொட்டு நம் தலையில் தடவக் கூடாது.

*கடவுள் படங்களில் காய்ந்த மாலைகள், பூக்கள், எலுமிச்சை பழம் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

*கிழிந்த ஆடை, நெருப்பு பட்ட ஆடை உள்ளிட்டவைகள் பீரோவில் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தவும்.

*தன்னையே சுற்றிக் கொண்டு சாமி கும்பிடக் கூடாது. அதேபோல் கண்ணாடி பார்த்துக் கொண்டு திருநீறு பூசக் கூடாது.

*இறந்தவர்கள் படங்களை பீரோ, கப்போர்டில் வைக்க கூடாது. ஒருவேளை வைத்திருந்தால் அதை உடனே அப்புறப்படுத்தவும்.

*மூன்று தலைமுறைக்கு முன் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை பீரோவில் வைக்கக் கூடாது.

*பணப்பெட்டி அருகில் கத்தி,கத்தரிக்கோல், ஊசி போன்ற கூர்மையான பொருட்களை வைக்கக் கூடாது.

*மாத்திரை, மருந்துகள் போன்றவற்றை பணப்பெட்டி இருக்கும் இடத்தில் வைக்கக் கூடாது.

*பணம் வைக்கும் பர்ஸில் மருந்து, பில்கள், இரும்பு சாவி, ஊக்கு பின் போன்றவற்றை வைக்கக் கூடாது.

*வங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது புதன் கிழமை கொடுக்கக் கூடாது.

*ஒருவருக்கு உப்பை கடனாக வழங்கக் கூடாது.