உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவை..!!

0
231
#image_title

உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவை..!!

1)வீட்டில் ஒருவித நறுமணம் வீசும். சந்தனம், விபூதி, பூக்கள், கற்பூரம் போன்ற நல்ல நறுமணங்கள் வீட்டில் வரும்.

2)பூஜைக்கு உள்ள எலுமிச்சை பழம் காய்ந்து போகலாம். ஆனால் அழுகிப் போகாது.

3)சாமி படங்களில் வைக்கும் மஞ்சள், குங்குமம் ஒரு வாரம் ஆனாலும் பொலிவாக இருக்கும். சாமி படங்களில் வைக்கும் பூக்கள் சீக்கிரம் காய்ந்து போகாது.

4)நல்ல செயலுக்கான எண்ணங்கள் மனதில் தோன்றும்.

5)வீட்டில் அடிக்கடி காகம் சத்தமிட்டு கொண்டு இருந்தால் வீட்டில் தெய்வ சக்தி உள்ளது என்று அறியப்படும். ஏனென்றால் சில குறிப்புகளை முன்கூட்டியே அறியும் திறன் காகத்திற்கு உண்டு.

6)வீட்டு பூஜை அறையில் பல்லி நடமாட்டம், பல்லி சத்தம் கேட்டு கொண்டே இருந்தால் தெய்வ சக்தி வீட்டில் உள்ளது என்று அர்த்தம்.

7)வீட்டில் இருப்பவர்கள் எப்பொழுதும் சண்டை சச்சரவு இன்றி வாழ்ந்து வருகிறார்கள் என்றால் அங்கு தெய்வ அனுக்கிரகம் முழுமையாக நிறைந்து இருக்கிறது என்று அர்த்தம்.

8)தீபக் சுடர் வெள்ளை நிறத்தில் எறிந்தால் அங்கு தெய்வீக சக்தி உள்ளது என்று அர்த்தம்.