தமிழகத்தில் இனி இந்த மரக்கன்றுகளை வளர்க்கவோ விற்கவோ கூடாது – நீதிமன்றம் அதிரடி

Photo of author

By Anand

தமிழகத்தில் இனி இந்த மரக்கன்றுகளை வளர்க்கவோ விற்கவோ கூடாது – நீதிமன்றம் அதிரடி

Anand

Chennai High Court Questions About Anti Corruption Department

தமிழகத்தில் இனி இந்த மரக்கன்றுகளை வளர்க்கவோ விற்கவோ கூடாது – நீதிமன்றம் அதிரடி

தமிழக வனப்பகுதியில் வளர்ந்துள்ள அந்நிய மரக்கன்றுகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை வைத்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று இந்த வழக்கு, நீதிபதிகள் சதீஷ் குமார், பரத் சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள் தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த தடை உத்தரவை அறிவிப்பாணையாக வெளியிடவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அது மட்டுமில்லாமல் ஏற்கனவே வளர்ந்துள்ள அந்நிய மரங்களை அப்புறப்படுத்தும் பணியை தமிழ்நாடு காகித நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள்தெரிவித்துள்ளனர்.