இது ஒன்று போதும்!! குடல் புண் ஆஸ்பத்திரிக்கு போகாமலே ஆறிவிடும்!!

0
55

இது ஒன்று போதும்!! குடல் புண் ஆஸ்பத்திரிக்கு போகாமலே ஆறிவிடும்!!

தற்போதுள்ள பரபரப்பான இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் நம்மில் பலரையும் தாக்கி வருவது இந்த வயிற்றுப்புண குடல்புண் தான். இதை நாகரிகமாக தற்போது அல்சர் என்று சர்வசாதாரணமாக கூறுகிறோம்.

இது சாதாரண விஷயம் கிடையாது. இந்த அல்சர் அதிகமானதால் குடலில் ஓட்டை விழுந்து ரத்தக்கசிவுக் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.நம் உடல் நிலையும் மன நிலையும் சீராக அமைய வேண்டுமென்றால் உணவு மிக மிக அவசியம்.

இந்த உணவு நன்றாக செரித்து கழிவுபொருள் நீங்கி மீதமுள்ள சத்துப் பொருட்கள் தான் நம் ரத்தத்தில் கலந்து உடலின் ஒவ்வொரு திசுவுக்கும் சென்றடைகிறது. வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளாரிக் அமிலம் மற்றும் பெப்சின் என்ற திரவம் உணவு செரித்தலுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

உணவு பாதையில் உள்ள உணவு குழாய், இரைப்பை சிறுகுடல், பெருங்குடல் போன்றவற்றில் ஏற்படும் திசுக்கள் சிதைவு மற்றும் பாதிப்பே குடல்புண் எனப்படும். அதாவது வயிறு மற்றும் குடல்களின் சுவர்களில் ஏற்படும் புண் என்றும் கூறலாம்.

வயிற்றுப் புண குடல் புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்.குடல் புண்கள் வருவதற்கு மிக முக்கிய காரணம் தவறான உணவு முறை மற்றும் உணவுகள்.

இவற்றை சரி செய்தால் மட்டுமே முதலில் குடல் புண்கள் வராமல் தடுக்க முடியும். வந்துவிட்டதே அதற்கு என்ன செய்வது என நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், எளிய வீட்டு மருத்துவம் மூலம் குணமாக்கலாம். எந்தெந்த வழிகளில் குடல் புண்களை சரி செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

மஞ்சள்

சீரகம்

தேன்

செய்முறை

1: முதலில் மஞ்சள் கட்டியை எடுத்து மிதமான சூட்டில் சுட்டு எடுக்கவும். பின்னர் அவற்றை உரலில் போட்டு அதனை இடிக்கவும். மைய எடுத்த பின்பு அதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

2: இதன்பின்பு சீரகத்தை மிதமான சூட்டில் வறுத்து அதனை இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

3: இந்த பொடியை மஞ்சள் பொடியுடன் கலந்து விடவும்.

4: இவற்றுடன் அரை ஸ்பூன் தேன் சேர்க்கவும்.

5 : இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புண் குடல் புண் மற்றும் மலக்குடலில் உள்ள புண் என அனைத்து புண்களும் சரியாகிவிடும்.

author avatar
Parthipan K