கண் எரிச்சலை சரி பண்ண இதை செய்யுங்கள்!! சில மணி நேரத்தில் உடனடி தீர்வு!!

0
63

கண் எரிச்சலை சரி பண்ண இதை செய்யுங்கள்!! சில மணி நேரத்தில் உடனடி தீர்வு!!

தற்போது பெரும்பாலானோர் கண் எரிச்சலால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்வோருக்கு, திரையை அதிகமாக பார்ப்பதால், கண்களில் இருந்து கண்ணீர் வருவதோடு, எரிச்சலும் உண்டாகிறது.

அதுமட்டுமின்றி, தற்போது சுற்றுச்சூழல் மிகவும் மாசுபாட்டுடன் இருப்பதால், அதிகப்படியான தூசிகள் கண்களில் படுவதோடு, பாக்டீரியாக்கள் மற்றம் வைரஸ்கள் கண்களை தாக்கி, புண், எரிச்சல் மற்றும் வலி போன்றவற்றை உண்டாக்குகின்றன.

மேலும் வெயிலில் நீண்ட நேரம் சுற்றினாலும், கண்கள் எரிச்சலுடன் இருக்கும்.இவ்வாறு கண்கள் எரிச்சல் வந்தால், அது சிறிது நேரத்தில் குணமாகிவிடும் என்று எண்ணக்கூடாது. இல்லாவிட்டால், கண்களில் பெரிய பாதிப்புக்களை சந்திக்க நேரிடும்.

எனவே கண்கள் எரிய ஆரம்பித்தால், அதனை சரிசெய்வதற்கான முயற்சியில் ஆரம்பத்திலேயே ஈடுபட்டால், கண்களில் எரிச்சல் ஏற்படுவது குணமாவதோடு, கண்களை அழகாகவும் வைத்துக் கொள்ள முடியும்.

கண் எரிச்சலை போக்க வீட்டுல செய்யக்கூடிய வைத்தியங்கள்:

குளிர்ந்த நீர்:

கண்கள் எரிச்சலுடன் இருந்தால், அப்போது குளிர்ந்த நீரில் கண்களை அலசினால், கண்களில் எரிச்சலை உண்டாக்கும் தூசிகள் நீங்கி, எரிச்சல் குணமாகும். குறிப்பாக, இவ்வாறு செய்யும் போது, கைகளை முதலில் நன்கு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அழுக்கான கையால் கண்களை எப்போதும் தொடக்கூடாது.

ரோஸ் வாட்டர்:

சிறிது காட்டனை எடுத்து, அதனை ரோஸ் வாட்டரில் நனைத்து, கண்களை மூடி அதன் மேல் வைத்தால், உடனே கண் எரிச்சல் குணமாகும். மேலும் கண்களில் புண் இருந்தால், இந்த முறையை செய்ஹயும் போது, புண்ணால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயை சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை வட்டமாக வெட்டி, கண்களின் மேல் 15 நிமிடம் வைத்து உட்கார்ந்தால், கண் எரிச்சல் குணமாவதோடு, கண்களைச் சுற்றியுள்ள கருவளையமும் நீங்கும். மேலும் இதில் உள்ள குளிர்ச்சி தன்மையால் கண்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

கற்றாழை ஜெல்: கற்றாழையின் ஜெல்லும் கண் எரிச்சலைப் போக்கக்கூடிய ஒரு பொருள் தான். அதற்கு கற்றாழையை சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து, பின் அதை எடுத்து, அதில் உள்ள ஜெல்லை காட்டனில் நனைத்து, கண்களின் மேல் வைக்க வேண்டும்.

விளக்கெண்ணெய்:

நல்ல சுத்தமான ஐ ட்ராப்பரை எடுத்துக் கொண்டு, அதில் விளக்கெண்ணெயை எடுத்து, கண்களில் ஒரு துளி விட்டு, கண்களை சிறிது நேரம் மூடினால், கண் எரிச்சல் நீங்கும்.

மேலும் இந்த முறையை அதிக அளவில் கண் எரிச்சல் உள்ளவர்கள், தினமும் 3-4 முறை செய்து வந்தால், கண்களில் உள்ள எரிச்சல் குறைவதோடு, கண்கள் புத்துணர்ச்சியுடனும் அழகாகவும் இருக்கும்.

இவ்வாறு செய்து வந்தால் நம் கண்களை குளிர்ச்சியாகவும் எரிச்சல் இல்லாமலும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

author avatar
Parthipan K