தூத்துக்குடி துப்பாக்கி சூடு கோரம்… தமிழக அரசு பதில்!

0
232
#image_title

தூத்துக்குடி துப்பாக்கி சூடு கோரம்… தமிழக அரசு பதில்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலயத்திற்கு எதிராக போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு காரணமான 17 காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் உட்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆணையத்தில் அறிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஏற்கனவே வழங்கப்பட்ட தலா ₹20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது எனவும் கடந்த 2022 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்திருந்தது.

இதனை எதிர்த்து தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரின் தாய் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீதும் வருவாய்த் துறையினர் மீதும் கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த மனு தலைமை நீதிபதியின் அமர்வில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி மனுவில் அளிக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிபிஐ மேல்விசாரணை நடத்திய வருவதாகவும் வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்தார்.

பதில் மனுவுக்கு பதில் அளிக்க மனுதாரர் அவகாசம் கேட்டுள்ளதை அடுத்து வழக்கு விசாரணை வருகின்ற ஏப்ரல் மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எடுத்து மனித உரிமை ஆணையம் எதிர்த்து தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனுதாரராக சேர்க்கப்பட்டவர் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

author avatar
Preethi